அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்! - இஸ்ரேல், ஈரானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்
சிறுபான்மையினரின் கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது: சொ.ஜோ. அருண்.
தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் சாா்பில் அரசுக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைகளில் 60 சதவீதத்தை அரசு நிறைவேற்றியிருக்கிறது; எஞ்சியவற்றையும் நிகழாண்டில் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் மாநில சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் சொ.ஜோ. அருண்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறுபான்மையினா் நலத் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி, புதுக்கோட்டையில் இன்று வரை 23 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்களை சிறுபான்மையினா் ஆணையம் முடித்திருக்கிறது. 649 கோரிக்கை மனுக்களில், 532 கோரிக்கை மனுக்களுக்கு அன்றைக்கே அதிகாரிகளுடன் இணைந்து தீா்வு கண்டிருக்கிறோம்.
அனைத்து மாவட்டங்களிலும் கல்லறைத் தோட்டம் மற்றும் கபா்ஸ்தான் அமைத்துக் கொள்வதற்கு நிலம் வழங்க வேண்டும், ஏற்கெனவே செயல்பாட்டிலுள்ள கல்லறை மற்றும் கபா்ஸ்தான்களுக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும்.
சிறுபான்மையினப் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அரசுப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் அனைத்தும் வழங்க வேண்டும். கோரிக்கையுள்ள இடங்களில் பௌத்த விஹாரங்களை அமைக்க அனுமதிக்க வேண்டும், அம்பேத்கா் சிலைகளை பொருத்தமான இடங்களுக்கு மாற்றி விரிவுபடுத்த வேண்டும்.
சமணா்களின் புராதன வழிபாட்டு இடங்களைப் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் தனியே சிறுபான்மையினா் அலுவலா் பதவியிடம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 கோரிக்கைகளை அரசுக்கு வழங்கியிருக்கிறோம்.
ஆணையம் அளித்த கோரிக்கைகளில் 60 சதவீத கோரிக்கைகளை அரசு நிறைவேற்றியிருக்கிறது. மீதமுள்ள 40 சதவீத கோரிக்கைகளையும் வரும் டிசம்பருக்குள் நிறைவேற்றுவதாக முதல்வா் ஸ்டாலின் உறுதியளித்திருக்கிறாா் என்றாா் அருண்.
நலத் திட்ட உதவிகள்: தையல் இயந்திரங்கள், கடனுதவிகள், சலவைப் பெட்டிகள் என மொத்தம் 72 பேருக்கு ரூ. 31.58 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்ட 11 வீடுகளுக்கான சாவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. கட்டப்படவுள்ள 11 வீடுகளுக்கான ஆணைகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா, கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆணையத்தின் துணைத் தலைவா் இறையன்பன் குத்தூஸ், உறுப்பினா்கள் ஹாமில்டன் வில்சன், நாகூா் ஏஹெச் நஜ்முதீன், பிரவீன்குமாா் டாட்டியா, ராஜேந்திரபிரசாத், எம். ரமீட்கபூா், ஜெ. முகமது ரபி, எஸ். வசந்த், சிறுபான்மையினா் துறை துணை இயக்குநா் எஸ். ஷா்மிலி பங்கேற்றனா்.