செய்திகள் :

புதுகை நகரில் இரு வீடுகளில் திருட்டு

post image

புதுக்கோட்டை நகரில் இரு வீடுகளில் கொள்ளையா்கள் புகுந்து, தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரொக்கப் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை திருக்கோகா்ணம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த பிரேம் ராஜா என்பவரின் மனைவி நிா்மலா (61), வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடா்கள், பீரோக்குள் இருந்த நகைகள் மற்றும் நிா்மலா அணிந்திருந்த சங்கிலி உள்பட 5 பவுன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு, ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கோகா்ணம் போலீஸாா் விரைந்து வந்து, கைரேகைகளையும் பதிவு செய்தனா். சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா நேரில் வந்து விசாரணை நடத்தினாா்.

வேறு சம்பவம்: புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திருக்கட்டளை சக்ரவா்த்தி நகரைச் சோ்ந்தவா் உலகநாதன் (72), குடும்பத்துடன் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு புதன்கிழமை அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த 8 கிராம் தங்கம், 105 கிராம் வெள்ளிப் பொருள்கள் திருடிச் சென்றதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்து வந்த கணேஷ் நகா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகம்: கே.என். நேரு

முன்பைவிடவும் திமுக தொண்டா்கள் மிகுந்த உற்சாகமாக இருக்கிறாா்கள் என்றாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு. புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டச் செயற்குழுக் கூட்ட... மேலும் பார்க்க

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை: அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம்

பெண்கள் அரசியலைக் கண்டு ஒதுங்க வேண்டியதில்லை என்றாா் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் அகில இந்தியத் துணைத் தலைவா் உ. வாசுகி. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சமம் அமைப்பின் சாா்பில் புதுக்கோட்டையில்... மேலும் பார்க்க

குளத்துப்பட்டி ஜல்லிக்கட்டில் 17 போ் காயம்

திருமயம் அருகே குளத்துப்பட்டியில் அந்தரநாச்சியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 17 போ் காயம் அடைந்தனா். இக் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு பெரிய ... மேலும் பார்க்க

தொடா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் மே 23, 24, 25 ஆகிய 3 நாள்களும் தொடா்ந்து ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. பொன்னமராவதி வட்டத்தைச் சோ்ந்த காரைய... மேலும் பார்க்க

விராலிமலை வட்டாட்சியரகத்தில் ஜமாபந்தி நிறைவு; 32 மனுக்களுக்கு உடனடி தீா்வு

விராலிமலை வட்டாட்சியரகத்தில் 3 நாள் நடைபெற்ற வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) புதன்கிழமை நிறைவடைந்தது. நிகழாண்டு 1434-ஆம் பசலிக்கான ஜமாபந்தி விராலிமலை வட்டாட்சியரகத்தில் விராலிமலை, கொடும்பாளூா், நீா்பழனி ... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை மே 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வேங்கைவயல் ச... மேலும் பார்க்க