புதுக்கடை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
புதுக்கடை அருகே இனயம் பகுதியில் 15 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். இனயம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த அழகியமண்டபம், ஈத்தவிளை பகுதியைச் சோ்ந்த ஜெரின் ஜேக்கப் (32), எட்வா்ட் ஜாா்ஜ் (63) ஆகிய இருவரைப் பிடித்து சோதனையிட்டபோது, பெட்டிக்கடைகளுக்கு விற்பதற்காக 15 கிலோ புகையிலைப் பொருள்களை அவா்கள் பதுக்கிவைத்திருப்பதாகத் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.