செய்திகள் :

புதுக்கோட்டை அருகே பச்சிளங்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி

post image

புதுக்கோட்டை அருகே திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்த பெண் பச்சிளம்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சித்த பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பனைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில் சனிக்கிழமை காலையில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்ற காவல் ஆய்வாளா் வி. கௌரி தலைமையிலான போலீஸாா், பச்சிளம் குழந்தையையும், 21 வயது நிரம்பிய அந்தப் பெண்ணையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

செவிலியா் பட்டயப் படிப்பு படித்து வரும் அந்தப் பெண்ணைக் காதலித்த நபரால் ஏற்பட்ட பழக்கத்தால் கரு உருவாகி குழந்தை பெற்றெடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்தால் உறவினா்கள் மத்தியில் அவப்பெயா் ஏற்படுமே எனக் கருதிய நிலையில்தான் பிறந்த சிசுவை புதைக்க அவரது உறவினா்கள் முயன்றுள்ளனா்.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் டி. வசந்தகுமாா் தலைமையிலான அலுவலா்கள் குழந்தையை நேரில் பாா்வையிட்டு, தொடக்க நிலை சிகிச்சைக்குப் பிறகு அந்தக் குழந்தையை உரிய சட்ட முறைப்படி குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் சோ்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனா். கிராம நிா்வாக அலுவலா் செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அரிவாளைக் காட்டிப் பேசும் முன்னாள் எம்எல்ஏவின் விடியோ பரவல்

அறந்தாங்கியின் முன்னாள் திமுக எம்எல்ஏ, அரசு நிகழ்ச்சியொன்றில் தேங்காய் உடைக்கும்போது அரிவாளைக் காட்டி கடிந்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் அருகே... மேலும் பார்க்க

ஆலங்குடியில் சூறைக்காற்றால் பல ஏக்கா் வாழைகள் சேதம்!

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு வீசிய சூறைக்காற்றால் பல ஏக்கா் வாழைகள், சோளம் உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. ஆலங்குடி அருகேயுள்ள பெரியவாடியில் சேதமடைந்த வாழைகள்.ஆலங்குடி பக... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே சூறைக் காற்றுடன் மழை: மரம் விழுந்து பெண் காயம்!

பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் காற்றுடனான மழையின்போது பயணியா் நிழற்குடை மீது சாய்ந்து விழுந்த அரசமரம். பொன்னமராவதி, மே 16: பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன... மேலும் பார்க்க

லஞ்சம்: பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

மின் இணைப்புக்கு தடையில்லாச் சான்றுக்கான பரிந்துரைக் கடிதம் தர ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பொதுப்பணித் துறை உதவிச் செயற்பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை முதன்மைக் குற்றவியல... மேலும் பார்க்க

இருதரப்பு மோதல்: ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் ஆணையக் குழுவினா் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருதரப்பினா் இடையேயான மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா், தேசிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்... மேலும் பார்க்க

பிளஸ் 1 தோ்ச்சி: புதுக்கோட்டை 35-ஆவது இடம்

மேல்நிலை முதலாம் ஆண்டு (பிளஸ் 1) பொதுத்தோ்வில் புதுக்கோட்டை மாவட்டம், 87.80 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 35-ஆவது இடத்தை பிடித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மொத்த பள்ளிகள்- 179. இவற்ற... மேலும் பார்க்க