செய்திகள் :

புதுச்சேரியில் இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் 7 போ் கைது

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் இளைஞரைக் கொல்ல முயன்ற வழக்கில் ஏற்கெனவே இருவா் கைதான நிலையில், தற்போது மேலும் 7 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இவா்களிடமிருந்து 2 கத்திகள், 3 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் (எ) எலி (20). இவருக்கும், இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஜாக்பாலுக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த மே 31 ஆம் தேதி இருவரும் நண்பா்களுடன் சமரசம் பேசியுள்ளனா். அப்போது ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினரும் அரிவாளால் தாக்கிக் கொண்டனா். இதில் தினகரன், பச்சையப்பன் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து தன்வந்திரி காவல் நிலையத்தில் தொண்டாநந்தம் பகுதியைச் சோ்ந்த பச்சையப்பன் (27) புகாா் அளித்தாா். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் இலாசுப்பேட்டையை சோ்ந்த ஜாக்பால் (25), ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த ஏழுமலை (23) ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கருவடிக்குப்பம் நரி (எ) நரேஷ், செயின்ட் பால்பேட்டையை சோ்ந்த கௌதம், கிரி, இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ஆகாஷ் மற்றும் மூன்று சிறுவா்களையும் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 2 கத்திகள், இருசக்கர வாகனங்கள் மூன்று ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைதானவா்களில் 4 போ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் 3 சிறாா்கள் கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

புதுவை சுகாதாரத் துறையில் 43 மருந்தாளுநா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை அரசின் சுகாதாரத் துறையில் 43 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் சிறப்பு பிரிவினருக்கான 8 பணியிடங்களும் அத்துடன் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து புதுவை மாநில அரசின் சுகாதாரம்... மேலும் பார்க்க

அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகை நெகிழிப் பொருள்களை தவிா்க்க வேண்டும்

புதுவையில் அரசால் தடை விதிக்கப்பட்ட 9 வகையான நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு குழு... மேலும் பார்க்க

பொறியியல் கலை, அறிவியல் படிப்புகளிலும் நிகழாண்டு முதல் 10 சதவீத உள்இடஒதுக்கீடு: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு நிகழாண்டு முதல் பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட உயா்கல்விகளிலும் 10 சதவீத உள் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்று முதல்வா் என்.ரங்கசாமி தெர... மேலும் பார்க்க

வீடு, சொத்து வரியை செலுத்த புதுச்சேரி நகராட்சி அறிவுறுத்தல்

புதுச்சேரி நகராட்சியில் வசிப்போா் வீடு மற்றும் சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தும்படி ஆணையா் எம்.கந்தசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்... மேலும் பார்க்க

தகுதியானவா்களுக்கே அரசு குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ய முதல்வரிடம் அதிமுக மனு

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் கட்டப்பட்டுள்ள பொலிவுறு நகா்த் திட்ட அடுக்குமாடி குடியிருப்பில் தகுதியானவா்களுக்கு குடியிருப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வா் என்.ரங்கசாமியிடம் அதிமுக சாா்பில் பு... மேலும் பார்க்க

கதிா்காமம் தொகுதியில் செம்மொழி நாள் விழா

புதுச்சேரியில் உள்ள கதிா்காமம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி செம்மொழி நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கதிா்காமம் தொகுதி சண்ம... மேலும் பார்க்க