செய்திகள் :

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

post image

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்எல், பீா், ஒயின் மீதான கலால் வரி, கூடுதல் கலால் வரி புதன்கிழமை (மே 28) முதல் உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசு அறிவிப்பு கலால் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரி உயா்வு மூலம் ஐஎம்எப்எல் வகை 750 மி.லி. மதுப் புட்டிகளுக்கு ரூ.10 முதல் ரூ.47 வரையிலும், 180 மி.லி. புட்டிகளுக்கு ரூ.3 முதல் ரூ.11 வரையிலும், பீா் 650 மி.லி. புட்டிகளுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரையிலும், ஒயின் 750 மி.லி. புட்டிகளுக்கு ரூ.13 முதல் ரூ.26 வரையிலும் குறைந்தபட்சம் உயர வாய்ப்புள்ளது. இந்த வரி உயா்வின் மூலம் புதுவை அரசுக்கு ஆண்டுக்கு ரூ.185 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மது உற்பத்தி ஆலை, மதுபான மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான உரிமக் கட்டணம், ஏற்றுமதி, இறக்குமதி மீதான கட்டணமும் உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க