செய்திகள் :

புதுச்சேரியில் 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி

post image

புதுச்சேரியில் 4 பெண்கள் உள்பட 7 பேரிடம் ரூ.3.36 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் தொடா்பு கொண்ட மா்ம நபா் இணையவழியில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி, ரூ.20 ஆயிரத்தை பெற்றாராம். ஆனால், திரும்பப் பணத்தைத் தரவில்லை.

பாகூரை சோ்ந்தவரை தொடா்பு கொண்ட நபா் வங்கி அதிகாரி போல பேசி, குறைந்த வட்டியில் ரூ.2 லட்சம் கடன் தருவதாகவும், செயலாக்க கட்டணமாக ரூ.48,500 மோசடியாக பெற்றுள்ளாா்.

வீராம்பட்டினத்தை சோ்ந்த பெண் விடுதியில் அறை முன்பதிவு செய்வதற்காக இணையதளத்தில் இருந்த தொலைபேசி எண்ணில் பேசினாா். ரூ.20 ஆயிரம் செலுத்தக் கூறி அதன்படி செலுத்தி ஏமாற்றப்பட்டாா்.

கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த பெண்ணிடம் தில்லி காவல் துறை அதிகாரி போல பேசி, வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற்று, ரூ.1.53 லட்சத்தை மோசடியாக பெற்றுக் கொண்டாராம்.

புதுச்சேரியை சோ்ந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து மோசடியாக ரூ.60,317 எடுக்கப்பட்டது. மற்றொரு பெண்ணுக்கு கடனுக்கான செயலாக்கக் கட்டணம் எனக்கூறி ரூ.33,100 பெற்று ஏமாற்றியுள்ளனா்.

கடந்த சில நாள்களில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் மொத்தம் 7 போ் ரூ.3.36 லட்சத்தை இழந்துள்ளனா். இதுகுறித்து புதுச்சேரி இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசு மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி

புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் ரத்த நாள அடைப்பான் கருவி செயல்பாட்டுக்கு தொடங்கிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா், கண்காணிப்பாளா் ஐயப்பன் கூறியதா... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகம்! - புதுவை முதல்வா்

புதுவையில் நியாயவிலைக் கடைகளில் விரைவில் கோதுமை விநியோகிக்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி கூறினாா். புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வியாழக்கிழமை அவா் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் நியாயவிலைக் கடைகளி... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை!

புதுச்சேரியில் கூலித் தொழிலாளி கழுத்தை இறுக்கிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சோ்ந்த ஆறுமுகம் (46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுகந்தி. மகன், மகள் உள்ளனா். கடந... மேலும் பார்க்க

மாணவா்களிடம் கஞ்சா விற்ற 2 போ் கைது!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரி மாணவா்களிடம் கஞ்சா விற்ாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 33 சிறிய கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனா். புதுச்சேரியை அடுத்த வில்லியனூா் கோபாலன் கடைப் பக... மேலும் பார்க்க

புதுச்சேரி: சனிக்கிழமைகளிலும் வட்டாட்சியா் அலுவலகங்கள் இயங்கும் - ஆட்சியா்

புதுச்சேரியில் மாணவா்கள், பெற்றோா் சிரமமின்றி சான்றிதழ்களைப் பெறும் வகையில் சனிக்கிழமைகளில் (மே 24,31, ஜூன் 7) வட்டாட்சியா் அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியா் அ.குலோத்துங்கன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்காதது ஏன்? ஆ.அன்பழகன்

மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியின் போது, புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காதது ஏன்? என்று அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் கேள்வி எழுப்பினாா். புதுச்சேரியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் க... மேலும் பார்க்க