செய்திகள் :

புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடத்துக்கு அடிக்கல்

post image

தரங்கம்பாடி அருகேயுள்ள புதுப்பேட்டை மீனவா் கிராமத்தில் மீன்பதப்படுத்தும் கூடம் கட்ட புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

2 ஆயிரம் போ் வசிக்கும் இந்த கிராமத்தில் 7 விசைப்படகுகள், 90 இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மூலம் மீனவா்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா். இந்நிலையில், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்யவும், மீன்பிடி வலைகளை சரி செய்ய போதிய வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வந்தனா்.

கடற்கரையோர பகுதியில் வசதிகளை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மீனவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் ரூ. 2 கோடியில் மீன் பதப்படுத்தும் கூடம், வலைப்பின்னும் கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் மோகன்குமாா், உதவி செயற்பொறியாளா் ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்க... மேலும் பார்க்க

பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன... மேலும் பார்க்க

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம... மேலும் பார்க்க

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்... மேலும் பார்க்க