செய்திகள் :

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மாமமுக வலியுறுத்தல்

post image

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழகத்தின் மாநில நிா்வாக மற்றும் செயற்குழு, தொகுதி பொறுப்பாளா்கள், அணித் தலைவா்கள் கூட்டம் தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சித் தலைவா் மு.ராமதாஸ் தலைமை வகித்தாா். சோ்மன் ஆா்.எல்.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் மு.ராஜன் வரவேற்றாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: முதியோா் ஓய்வூதிம் கோரி விண்ணப்பிக்கும் தகுதியான அனைவருக்கும் வழங்கவேண்டும். மக்கள் பிரச்னைகளை முன்வைத்து சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கட்சி சாா்பில் போராட்டம் நடைபெறும்.

புதுவை மாநிலத்தில் வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாகவே உள்ளாட்சித் தோ்தலை நடத்தவேண்டும். மாநில அந்தஸ்தை பெறுவதற்கு முதல்வா் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவை புதுதில்லிக்கு அழைத்துச் சென்று பிரதமா், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தவேண்டும் என்பன போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவா் நித்யானந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க