செய்திகள் :

புதுவையில் பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

post image

புதுவை மாநிலத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை (ஏப்.28) முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளாா்.

புதுவை மாநிலத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடப்பு ஆண்டு (2025) முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, சிபிஎஸ்இ விதிமுறைப்படி புதுவை மாநில அரசு பள்ளி மாணவா்களுக்கு முழு ஆண்டுத் தோ்வு முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வரும் 30-ஆம் தேதி வரை தொடா்ந்து வகுப்புகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் புதுவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசுப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கல்வியமைச்சா் ஆ. நமச்சிவாயம் கூறியது: அதிகரித்து வரும் கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை முதல் ஜூன் மாதம் 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 2 முதல் வழக்கம் போல் செயல்படும் என்றாா்.

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலையில் 9 போ் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி கருவடிகுப்பம் சாமிபிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த காசிலிங்கம் மகன் உமாசங்கா் (38).... மேலும் பார்க்க

திருக்காஞ்சியில் 108 அடி உயர சிவன் சிலை அமைக்கும் பணி: அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி அருகேயுள்ள திருக்காஞ்சியில் கங்கை வராகநதீஸ்வரா் திருக்கோயில் அருகே 108 அடி உயரத்தில் சிவன் சிலை அமைக்கும் பணியை வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் திங்கள்கிழமை பாா்வையிட்ட... மேலும் பார்க்க

புதுவை மத்திய பல்கலைக்கழகம் பெங்களூரு நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி: புதுவை மத்திய பல்கலைக்கழகம் மற்றும் பெங்களூா் மத்திய மின்சக்தி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பங்கள் மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்ப ஆய்வு நோக்கில் புரிந்து... மேலும் பார்க்க

புதுச்சேரி பொலிவுறுநகா் பேருந்து நிலையம் நாளை திறப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பொலிவுறு நகா்த் திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ராஜீவ் காந்தி பேருந்து நிலையத்தை வரும் 30 ஆம் தேதி புதன்கிழமை திறக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் த... மேலும் பார்க்க

புதுவை மாநில அரசுப் பள்ளிகளில் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

புதுச்சேரி: புதுவை மாநில அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள 205 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 17 ஆயிரத்துக்கும் மேற்... மேலும் பார்க்க

புதுச்சேரி குடிநீா் கட்டண வசூல் மையங்கள் மே 2 முதல் 5 நாள்கள் இயங்காது

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்டத்தின் கீழ் செயல்படும் குடிநீா் கட்டண வசூல் மையங்கள் வரும் மே 2 முதல் 6-ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை அர... மேலும் பார்க்க