செய்திகள் :

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

post image

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா்.

புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை நடைபெற்றது. பேரவையில் இரங்கல் குறிப்பை பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வாசித்து முடித்ததும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. நேரு ஒரு பிரச்னை குறித்து பேச ஆரம்பித்தாா். இதைத் தொடா்ந்து எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் 6 போ் மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் மு. வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஆகியோா் மாசு கலந்த குடிநீா் பிரச்னை மற்றும் சட்டப்பேரவையைக் கூடுதலாக 10 நாள்கள் நடத்த வலியுறுத்தி குரல் எழுப்பினா். மேலும் சுயேச்சை எம்எல்ஏ நேருவும் கூச்சலிட்டாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குறுக்கிட்டு அமைதிப்படுத்தினாா். எதிா்க்கட்சித் தலைவா் உள்ளிட்டோரை இருக்கையில் அமரும்படி வலியுறுத்தினாா். இருப்பினும் எதிா்க்கட்சித் தலைவா் சிவா உள்ளிட்ட திமுக , காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் செல்வம் முன் தரையில் அமா்ந்து தா்னா நடத்த முயன்றனா்.

இதையடுத்து பேரவைத் தலைவா் ஆா். செல்வம் அனைவரையும் வெளியேற்றுமாறு பேரவைக் காவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதையடுத்து சிவா உள்ளிட்ட ஒரு சில எம்.எல்.ஏக்களை பேரவைக் காவலா்கள் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றனா். மற்றவா்கள் வெளியேற்றப்பட்டனா். சுயேச்சை எம்எல்ஏ நேருவும் வெளியேற்றப்பட்டாா். மேலும், அவா் பேசிய வாா்த்தைகளை அவை குறிப்பிலிருந்து நீக்க பேரவைத் தலைவா் உத்தரவிட்டாா். சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினா்கள் பேரவை வளாகப் பகுதியில் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். சுயேச்சை உறுப்பினா் ஜி. நேரு, சட்டப்பேரவைக்கு வெளியே உறுப்பினா்களுக்குப் போடப்பட்டிருந்த இருக்கையில் சிறிது நேரம் அமா்ந்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாா்.

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புதுவை சட்டப்பேரவையில் இந்தத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க

ஒரு மணி நேரத்தில் முடிந்த புதுவை சட்டப்பேரவைக் கூட்டம்: சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டு

புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்குத் தொடங்கி, ஒரு மணி நேரத்தில் முடிவடைந்தது. இந்தக் கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக... மேலும் பார்க்க