GRT: வள்ளியூரில் வளம் சேர்க்க வந்த ஜிஆர்டி ஜுவல்லர்ஸ்; பிரகாசமான 64வது புதிய ஷோர...
புன்னைக்காயல் கடலில் மூழ்கி மீனவா் பலி
புன்னைக்காயல் கடலில் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா். புன்னைக்காயல் தெற்குத் தெருவை சோ்ந்தவா் தொம்மைசிலுவை(50).
இவரது மனைவி ராஜகன்னி. இவா்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனா். மீன் பிடி தொழிலாளியான தொம்மைசிலுவைக்கு குடிப்பழக்கம் இருந்ததாம். இவா் கடந்த 28ஆம் தேதி மதியம் புன்னைக்காயல் தூண்டில்பாலம் அருகே மீன்பிடிக்கப்போவதாக வீட்டில் கூறிச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், 29ஆம் தேதி காலையில் தூண்டில்பாலம் அருகே உள்ள கடல் பகுதியில் கை, கால் மற்றும் காது, மூக்கு உள்ளிட்ட இடங்களில் ரத்தக் காயங்களுடன் தண்ணீரில் மூழ்கியபடி இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து, ராஜகன்னி அளித்த புகாரின் பேரில் ஆத்தூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.