செய்திகள் :

பும்ரா இல்லாதது இந்தியாவின் பிரச்னை; இங்கிலாந்தின் பிரச்னையல்ல: பென் ஸ்டோக்ஸ்

post image

இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

வெற்றி கணக்கைத் தொடங்கும் முனைப்பில் ஷுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியும், வெற்றியைத் தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணியும் உள்ளன. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் எனக் கூறப்படுகிறது.

பென் ஸ்டோக்ஸ் கூறுவதென்ன?

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கும் நிலையில், டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்த டெஸ்ட் தொடர் முழுவதும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார் என்பது இந்திய அணியின் பிரச்னை. அதனை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நான் இங்கிலாந்து அணியின் கேப்டன். இந்திய அணி மிகவும் சிறந்த அணி. அவர்கள் எப்போதும் சவாலளிக்கும் விதமாக விளையாடுவார்கள். அவர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என நினைக்கவில்லை.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ரிஷப் பந்த் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் திறமை வாய்ந்த வீரர். அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை கடந்த வாரம் பார்த்திருப்போம். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசி அசத்தினார். அவர் மிகவும் அபாயகரமான வீரர் என்றார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோதே, ஜஸ்பிரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

England captain Ben Stokes on Tuesday dismissed the chatter surrounding Jasprit Bumrah's availability for only three Tests out of five as India's problem.

இதையும் படிக்க: ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

2-வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவிக்காத இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி இன்னும் அறிவிக்கவில்லை.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (ஜூலை 2) முதல் தொடங்கு... மேலும் பார்க்க

23 ஆண்டுகால சாதனை முறியடிப்பு: ஜேக் காலிஸுக்குப் பிறகு முதல் தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் கார்பின் போஸ்ச் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே போட்டியில் சதம், 5 விக்கெட்டுகளை எடுத்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை 328 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்றுடன் ... மேலும் பார்க்க

சிஎஸ்கேவுக்கு விற்கப்படுகிறாரா சஞ்சு சாம்சன்?

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்கள் சிலர் விற்கப்பட்டு, புதிய வீரர்கள் வாங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இளம்... மேலும் பார்க்க

பாரம்பரியமான பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் ஒப்படைத்த லயன்..! ஓய்வு பெறுகிறாரா?

ஆஸி. வீரர் நாதன் லயன் தனது அணிக்காக பாட்டு பாடும் ’ஆஸி. சாங் மாஸ்டர்’ எனும் பொறுப்பை அலெக்ஸ் கேரியிடம் கைமாற்றியுள்ளார். ஆஸி. அணி டெஸ்ட் போட்டிகளில் வெல்லும்போதெல்லாம் ஒரு கிராமியப் பாடலைப் பாடுவது வழ... மேலும் பார்க்க

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முன்னேற்றம்!

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.இந்திய அணியின் துணைக் கேப்டனான ஸ்மிருதி மந்தனா ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவ... மேலும் பார்க்க