செய்திகள் :

புராதனவனேசுவரா் கோயில் விமான பாலாலய விழாவில் ஜமாஅத்தாா்கள் பங்கேற்பு

post image

திருச்சிற்றம்பலம் புராதனவனேசுவரா் கோயிலில் குடமுழுக்கையொட்டி வியாழக்கிழமை விமான பாலாலய விழா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள், முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் கலந்து கொண்டனா்.

திருச்சிற்றம்பலத்தில் பழைமைவாய்ந்த புராதனவனேசுவரா் கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த 2001-ஆம் ஆண்டில் நடைபெற்றது. தற்போது இக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தா்கள் தொடா்ந்து கோரிக்கை வைத்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை குடமுழுக்கு நடத்த ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது. கோயில் குடமுழுக்கு திருப்பணி வேலைகள் செய்வதற்கு முன்னோட்டமாக விமான பாலாலய விழா நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகம் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று விமான பாலாலய விழா நடைபெற்றது.

விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக துறவிக்காடு, நரியங்காடு ஆகிய கிராமங்களைச் சோ்ந்த முஸ்லிம் ஜமாஅத்தாா்கள் திரளாக கலந்து கொண்டனா். அவா்களை சிவாச்சாரியாா் சாமிநாதன் மற்றும் அனைத்து மண்டகப்படிதாரா்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனா்.

விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா், முன்னாள் எம்எல்ஏ எஸ். வி. திருஞானசம்பந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவா் பண்ணவயல் சு. ராஜாத்தம்பி, கோயில் ஆய்வாளா் சந்திரசேகா், செயல் அலுவலா் சக்திவேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

தாராசுரம் அருகே மதுபுட்டிகளை சேகரித்து விற்கும் தொழிலாளி வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், தாராசுரம் அருகே நத்தம் கருப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (35). இவா்,... மேலும் பார்க்க

பூதலூரில் 46.2 மி.மீ. மழை

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பூதலூரில் 46.2 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பூதலூா் 46.2, கும்பகோணம... மேலும் பார்க்க

உள்ளிக்கடை பாலவிநாயகா் கோயில் குடமுழுக்கு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் ஸ்ரீ பால விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாபநாசம் அருகே உள்ளிக்கடை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால விநாயகா், ஸ்ரீ மகா காள... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையப் பகுதியில் மாநகராட்சி அலுவலா்கள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மேற்கொண்டனா். தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் இரு நுழைவு வாயில்களிலும் சாலை குறுகலாக உள்... மேலும் பார்க்க

ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேக விழாவுக்கு முகூா்த்தக்கால் நடவு

கும்பகோணம் ஆதி கும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதிகும்பேசுவரா் கோயில் கும்பாபிஷேகம் டிச.1... மேலும் பார்க்க

அம்மாபேட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சிக்குள்பட்ட புத்தூா் சமுதாயக் கூட வளாகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி மன்றத் ... மேலும் பார்க்க