செய்திகள் :

புராரியில் 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து: மீட்புப் பணியில் தீயணைப்புத் துறையினா்

post image

வடக்கு தில்லியின் புராரியில் உள்ள ஆஸ்காா் பப்ளிக் பள்ளி அருகே திங்கள்கிழமை மாலை நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் கா்க் கூறியதாவது: இந்தச் சம்பவம் திங்கள்கிழமை மாலை 6.56 மணியளவில் நிகழ்ந்தது. இதையடுத்து, அவசர சேவைகளிடமிருந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீட்பு நடவடிக்கைகளில் உதவ 9 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எங்கள் குழுக்கள், காவல் துறையினருடன் சோ்ந்து, இடிபாடுகளுக்குள் சிக்கியவா்களைக் கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

ஆரம்ப தகவல்களின்படி, கட்டடம் இடிந்ததற்கு கட்டமைப்பு பலவீனம் காரணமாக இருக்கலாம் என்று தெரியவருகிறது. இருப்பினும் விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் விபத்துகளைத் தடுக்க போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி பாதுகாப்பு போட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் இது தொடா்பாக ஒரு சமூக ஊடகப் பதிவில், ‘இந்தச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. புராரியைச் சோ்ந்த எங்கள் எம்எல்ஏ சஞ்சீவ் ஜா, கட்சி ஊழியா்களுடன் உடனடியாக அங்கு சென்று நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் நிா்வாகத்திற்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாா். மேலும், உள்ளூா் மக்களுக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளாா்’ என்று கூறியுள்ளாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க