செய்திகள் :

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

post image

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்ற பல்வேறு யூகங்கள் எழுந்தன.

இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது முதல் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது வரை பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த காணொலியில், சரியாக இன்று பிற்பகல் 1.38 மணிக்கு ஓடுதளத்தில் இருந்து புறப்படும் விமானம் சில விநாடிகளில் பறக்கத் தொடங்குகிறது.

அடுத்த 20 விநாடிகளில் மேலே பறக்க முடியாமல் தள்ளாடியபடி தரையை நோக்கி வரும் விமானம், மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறுகிறது.

இதன்மூலம் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ அறிவித்திருப்பது தெரியவருகின்றது.

இதனிடையே, விமான விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

மெல்ல அதிகரிக்கும் கரோனா: 7,400 ஆன பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 269 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகையே உலுக்கிய கரோனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், நாளுக்குநாள்... மேலும் பார்க்க

பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் இழப்பீடு: டாடா குழுமத்துக்குக் கோரிக்கை

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான மருத்துவ மாணவர்கள் குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று டாடா குழுமத்தின் நிர்வாகி என். சந்திரசேகரனுக்கு இந்திய மருத்துவக் கழகம் வேண்ட... மேலும் பார்க்க

விமான விபத்து: டிஎன்ஏ சோதனைக்காக காத்திருக்கும் உறவுகள்! கண்ணீருடன்

இந்தியா வந்து லண்டன் திரும்பியவர்களும், லண்டனில் புது வாழ்வைத் தொடங்கச் சென்றவர்களும் விமான விபத்தில் பலியான நிலையில், அவர்களது உறவினர்கள், அகமதாபாத் அரசு மருத்துவமனையில் டிஎன்ஏ பரிசோதனைக்காகக் காத்தி... மேலும் பார்க்க

ஒரு நாள்தான்... அவள் வீட்டுக்கு வந்துவிடுவாள்: விமானப் பணிப்பெண் தாய்

ஒட்டுமொத்த நாடே, விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேளையில், தனது மகள் வந்துவிடுவாள் என நம்பிக்கையோடு இருக்கிறார் விமானப் பணிப்பெண் சைனீதாவின் தாய்.ஏர் இந்த... மேலும் பார்க்க

உயிரிழந்த 2 விமானிகள், 7 ஊழியா்கள் மகாராஷ்டிர மாநிலத்தவா்

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களில், 2 விமானிகள் மற்றும் 7 ஊழியா்கள் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்தவா்களாவா். குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு வியாழக்கிழமை புறப்பட்ட ஏா் இந்தியா விமான... மேலும் பார்க்க

கன்னடம் குறித்து கமல்ஹாசன் கருத்து: வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 20-க்கு ஒத்திவைப்பு

கன்னடம் பற்றிய நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கை விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், அடுத்த விசாரணையை ஜூன் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.சென்னையில் நடைபெற்ற 'தக் லைஃப்'... மேலும் பார்க்க