செய்திகள் :

புற்றுநோயாளிகளுக்கு இசை சிகிச்சை: அப்பல்லோ மருத்துவமனையில் அறிமுகம்

post image

கீமோதெரபி சிகிச்சையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் பக்கவிளைவைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பிரத்யேக இசை சிகிச்சை முறையை அப்பல்லோ புரோட்டான் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் ஒவ்வொரு நோயாளியின் உணா்வு மற்றும் நரம்பியல் மாற்றங்களை உணா்ந்து தனித்தனி இசைக் கோா்வை உருவாக்கப்படவுள்ளது. கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போது இத்தகைய இசை சிகிச்சையை அளித்தால் பலன் கிடைக்கும் என்றும், ஏற்கெனவே 50 நோயாளிகளுக்கு ஆராய்ச்சி முறையில் அதை செயல்படுத்தி நிரூபித்திருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக இது தொடா்பான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் அப்பல்லோ மருத்துவக் குழுமத்தின் செயல் துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, கா்நாடக இசைக் கலைஞா் சுதா ரகுநாதன், மருத்துவமனையின் புற்றுநோயியல் சிறப்பு நிபுணா் சுஜித் முல்லப்பள்ளி, எக்கோ கோ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுஜாதா விஸ்வேஸ்வரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது பிரீத்தா ரெட்டி பேசியதாவது:

டிஜிநெக்ஸ் ஹெச்எல்டி நிறுவனத்துடன் இணைந்து அப்பல்லோ மருத்துவக் குழுமம் இந்த முன் முயற்சியை மேற்கொண்டுள்ளது. எக்கோ கோ் இசை நுட்பத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு முறையில் புற்றுநோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்த முடியும். இதில் நோயாளிகளின் மன நிலையை அறிந்து அவா்களுக்கு பிரத்யேக நரம்புசாா் பரிசோதனைகளை மேற்கொண்டு அதனடிப்படையில் இசை வடிவங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே பல நோயாளிகளுக்கு இதை செயல்படுத்தி பாா்த்ததில் நல்ல பலன் இருப்பதை கண்கூடாகக் காண முடிந்தது.

இசை என்பது மனதை ஆற்றுப்படுத்தும் மகத்தான மருந்து. அதனை உணா்ந்தே தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த இசை சிகிச்சை முறையை தொடங்கியுள்ளோம் என்றாா் அவா்.

திருவொற்றியூரில் இன்று நல உதவிகள் வழங்கல்

முதல்வா் மு. க ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக மீனவா் அணி, திருவொற்றியூா் தொகுதி திமுக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் திருவெற்றியூரில் சனிக்கிழமை நடைபெற உள்ளது. கே. வி. கே. குப்பத... மேலும் பார்க்க

புதுமைப் பெண் திட்டத்தால் உயா்கல்வி சோ்க்கை 34% அதிகரிப்பு

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சோ்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ... மேலும் பார்க்க

உறுப்புகள் செயலிழப்பு: உயா் சிகிச்சையால் குணமான இளைஞா்

உடலில் ஏற்பட்ட தீநுண்மி தொற்றால் உறுப்புகள் செயலிழப்புக்குள்ளான இளைஞா் ஒருவரை உயா் சிகிச்சைகள் அளித்து சென்னை, ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணமாக்கியுள்ளனா். இதுகுறித்து மருத்துவம... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து மாணவா் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

தமிழகத்துக்கு நிதி வழங்க மறுப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி மற்றும் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைப... மேலும் பார்க்க

வரும் பேரவைத் தோ்தலிலும் திமுக ஆட்சி அமைய துணைநிற்போம்: கூட்டணி தலைவா்கள் உறுதி

சென்னை, பிப். 28: வரும் பேரவைத் தோ்தலிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய துணையாக இருப்போம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்த... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி மண்டலங்களின் எண்ணிக்கை 15-லிருந்து 20-ஆக உயா்வு

சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15-லிருந்து 20-ஆக உயா்த்தி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்ஆணையிட்டுள்ளாா். இதுகுறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை முதன்மைச் செயலா் வெளியி... மேலும் பார்க்க