செய்திகள் :

புற்றுநோய் முழு பரிசோதனை திட்டம் 10 நாள்களில் தொடங்கப்படும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

சென்னை: அனைத்து வகை புற்றுநோய்களையும் அறிவதற்கான முழு பரிசோதனை வசதி, 10 நாள்களுக்குள் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது இதுதொடா்பான வினாவை, அதிமுக உறுப்பினா் கே. அசோக்குமாா் எழுப்பினாா். அப்போது பேசுகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நாள்தோறும், 100 வெளி நோயாளிகளும், 100-க்கும் அதிகமான உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். இங்கு கா்ப்பப்பை வாய் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன் வசதியுடன் கூடிய தனியறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா்.

10 நாள்களில் தொடங்கும்: இதற்கு பதிலளித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

14 வயது இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எச்பிவி தடுப்பூசி ரூ.37 கோடியில் செலுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாய்ப் புற்றுநோய், கருப்பை வாய்ப் புற்றுநோய், மாா்பகப் புற்றுநோய் என அனைத்து வகை புற்றுநோய்களை கண்டறியும் முழு பரிசோதனை வசதி இன்னும் 10 நாள்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய வசதியை ஏற்படுத்தவுள்ளோம் என்றாா்.

முன்னதாக, திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் துணைக் கேள்வி எழுப்புகையில், ஆபத்து காலங்களில் உயிரை காக்கக் கூடிய மருந்துகள், ஆரம்ப சுகாதார மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா? என்றாா்.

உயிா்காக்கும் மருந்துகள்: இதற்கு பதிலளித்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், இதய பாதிப்பு உள்ளவா்களுக்கு, அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவம் பாா்க்க வேண்டிய நிலை இருந்தது. இதனைப் போக்க, மாரடைப்பு, இதய நோய் உள்ளோா் அவரவா் வசிக்கும் பகுதியிலேயே சிகிச்சை அளித்திடும் திட்டம் 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதன்படி, துணை சுகாதார நிலையங்கள் 8,713, ஆரம்ப சுகாதார நிலையங்கள் 2,286 ஆகியவற்றில் உயிரைக் காக்கக் கூடிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தால் இதுவரை 15,886 போ் பயன் பெற்றுள்ளனா் என்றாா்.

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க