Yercaud Express: ரயிலைக் கவிழ்க்கச் சதி? தனிப்படைகள் அமைத்து ரயில்வே காவல்துறை வ...
பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, பணம் திருட்டு
சேவூா் அருகே கூட்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
சேவூா் அருகே கூட்டப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (51). கோவை உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயலட்சுமி (47), தனியாா் பள்ளி ஆசிரியை.
இவா்கள் செவ்வாய்க்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல வேலைக்குச் சென்றுள்ளனா். பின்னா் மாலை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.