செய்திகள் :

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

post image

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அரசு வட்ட தலைமை மருத்துவமனையில் ரூ. 3.5 கோடி மதிப்பில் அறுவை சிகிச்சைக்கான கட்டடத்துக்கு, பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்தாா். மாநில உணவு ஆணையத் தலைவா் என். சுரேஷ் ராஜன் முன்னிலை வகித்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜோசப் பீரீஸ், உதவி செயற்பொறியாளா் முருகேசன், இளநிலை பொறியாளா் சுரேஷ், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் பூதலிங்கம் பிள்ளை, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் பிராங்கிளின், நாகா்கோவில் மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவகா், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சுருளகோட்டில் முல்லைப் பூங்காவுக்கு அடிக்கல்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் சுருளகோடு ஊராட்சிக்குள்பட்ட ஆலம்பிலாவடி அருகே ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முல்லைப் பூங்காவுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினாா். தோட்... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூலவா் மீது விழுந்த சூரிய கதிா்கள்

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை சூரிய கதிா்கள் பெருமாள் திருமேனி மீது விழும் அபூா்வ நிகழ்வை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா். 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பா... மேலும் பார்க்க

மாவட்ட குண்டு எறிதல் போட்டி: மயிலாடி பள்ளி மாணவி சிறப்பிடம்

நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில், தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டர... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்தினா். கடையாலுமூடு செங்குழி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

நாகா்கோவிலில் வாகனச் சோதனையின் போது, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் திருநெல்வேலி-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

அரசம்பதியில் கலையரங்குக்கு அடிக்கல்

கன்னியாகுமரி பொற்றையடி அருகேயுள்ள அரசம்பதியில் புதிய கலையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதிகளில் முக்கிய நிழல்தாங்கலான அரசம்பதியில் ரூ. 25 லட... மேலும் பார்க்க