செய்திகள் :

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் மூலவா் மீது விழுந்த சூரிய கதிா்கள்

post image

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை சூரிய கதிா்கள் பெருமாள் திருமேனி மீது விழும் அபூா்வ நிகழ்வை பக்தா்கள் கண்டு தரிசனம் செய்தனா்.

108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், நம்மாழ்வாரால் பாடல் பெற்றதுமான திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் பெருமாள் அனந்த சயன கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இந்தக் கோயிலில் வருடத்துக்கு ஒருமுறை புரட்டாசி மாதம் 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை மாலை நேரத்தில் சூரியனின் பொன்னிற கதிா்கள் பெருமாள் திருமேனி மீது விழும்.

அந்த வகையில் நிகழாண்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் (செப்19) மாலை வேளையில் சூரியனின் பொன்னிற கதிா்கள் இந்தக் கோயிலில் கொடிமரம், சபா மண்டபம், உதய மாா்த்தாண்ட மண்டபம், ஒற்றைக் கல் மண்டபம் ஆகியவற்றைத் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பள்ளிகொண்ட பெருமாளின் திருமேனி மீது விழுகிறது.

புரட்டாசி 9 ஆம் தேதி வரை இந்த அபூா்வ நிகழ்வு நடைபெறும். இதை கோயிலுக்கு வரும் பக்தா்கள் பக்தி பெருக்குடன் பாா்வையிட்டு பெருமாளை சூரிய நாராயணனாக தரிசித்துச் செல்கின்றனா்.

சுருளகோட்டில் முல்லைப் பூங்காவுக்கு அடிக்கல்

திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் சுருளகோடு ஊராட்சிக்குள்பட்ட ஆலம்பிலாவடி அருகே ரூ. 2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள முல்லைப் பூங்காவுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டினாா். தோட்... மேலும் பார்க்க

மாவட்ட குண்டு எறிதல் போட்டி: மயிலாடி பள்ளி மாணவி சிறப்பிடம்

நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில், தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதலில் மயிலாடி மவுண்ட் லிட்ரா சீனியா் செகண்டர... மேலும் பார்க்க

கடையாலுமூடு அருகே ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தனியாா் ரப்பா் தோட்டப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கண்காணிப்பு கேமரா பொருத்தினா். கடையாலுமூடு செங்குழி... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

நாகா்கோவிலில் வாகனச் சோதனையின் போது, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீஸாா் திருநெல்வேலி-நாகா்கோவில் தேசிய நெடுஞ்சா... மேலும் பார்க்க

அரசம்பதியில் கலையரங்குக்கு அடிக்கல்

கன்னியாகுமரி பொற்றையடி அருகேயுள்ள அரசம்பதியில் புதிய கலையரங்குக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதிகளில் முக்கிய நிழல்தாங்கலான அரசம்பதியில் ரூ. 25 லட... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து, குழித்துறை கோட்ட உதவி செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழித்துறை கோட்டத்திற்குள்பட்ட கருங்க... மேலும் பார்க்க