செய்திகள் :

பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!

post image

உத்தரப் பிரதேசத்தில் பூனையின் இறப்பால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூஜா(32). இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தில்லியைச் சேர்ந்த ஒருவரி திருமணம் செய்தார். இருவருக்குமிடையே அடிக்கடி மோதல்போக்கு ஏற்படுவதால் இரண்டு வருடத்துக்கு முன்னர் விவகாரத்து செய்தனர். இதனால் பூஜா தனது தாய் கஜ்ரா தேவியுடன் வசித்து வந்தார்.

கணவருடன் பிரிவு காரணமாகத் தனிமையில் இருந்த பூஜா பூனை ஒன்றினை வளர்த்து வந்தார். பூனையின் மீது அதீத காதல் கொண்டு பல ஆண்டுகளாக பாசத்துடன் பூனையை வளர்த்து வந்தார்.

திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பூனை சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தது. இந்த தகவலை அவரது குடும்ப உறுப்பினர்கள் பூஜாவிடம் தெரிவித்தனர். கதறி அழுதார் பூஜா.

தாய் பூஜாவிடம் பூனையை அடக்கம் செய்யச் சொல்லியிருக்கிறார். ஆனால் பூஜா அதற்கு மறுப்பு தெரிவித்து பூனை மீண்டும் உயிர்பெறும் என்று கூறியுள்ளார்.

பூனையை அடக்கம் செய்ய மனமில்லாமல் அதன் உடலோடு அழுதபடி தூங்கிவந்துள்ளார். அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய மன்றாடினர், ஆனால், அதற்கு பூஜா மறுப்புதெரிவித்த நிலையில், மூன்றாவது நாளாகப் பூனை மீண்டும் உயிருடன் வராது என்பதைப் புரிந்துகொண்டார்.

இதையடுத்து, துக்கம் தாளாமல் பூஜா தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். பூஜா இறந்ததைக் கண்ட அவரது கும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இதுதொடர்பாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸாரி பூஜாவின் உடலைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலி!

குஜராத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 286 சிங்கங்கள், 456 சிறுத்தைகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷைலேஷ் ... மேலும் பார்க்க

நாட்டின் உற்பத்தி கொள்முதல் 14 மாதங்களில் இல்லாத அளவு சரிவு!

நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் கடந்த மாதத்தில் 56.3 சதவீதமாக குறைந்துள்ளது. இது ஜனவரி மாதத்தில் 57.7 சதவீதமாக இருந்தது. 2023 டிசம்பர் முதல் நாட்டின் உற்பத்திக்கான கொள்முதல் குறைந்துவரும் நிலையில், த... மேலும் பார்க்க

தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற மகன்!

ஒடிசாவில் தந்தையின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற மகனை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் சந்துவா கிராமத... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தான அறைகள் பெற புதிய விதி: தரிசன டிக்கெட் இருந்தால்தான்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தங்கும் அறைகள் ஒதுக்கீட்டில் புதிய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.திருமலை திருப்பதி ஏழும... மேலும் பார்க்க

மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!

ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

ஆறு ஆண்டுகளாக நிரப்பப்படாத மக்களவைத் துணைத் தலைவர் பதவி!

18-ஆவது மக்களவை தொடங்கி 9 மாதங்கள் ஆகியும், இதுவரை அவையின் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது.17-ஆவது மக்களவை முழுவதும் துணைத் தலைவர் பதவி நிரப்பப்... மேலும் பார்க்க