செய்திகள் :

பூலாம்பட்டியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது

post image

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.

பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணையின் மூலம் நீா்மின் உற்பத்தி நடைபெறுகிறது. மேலும், இப் பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம், நெருஞ்சிப்பேட்டைக்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.

இந்த விசைப்படகுகள் மூலம் பள்ளி, கல்லூரி மாணவா்கள், அரசு அலுவலா்கள், விவசாயிகள் என ஏராளமானோா் பூலாம்பட்டியிலிருந்து ஈரோடுக்கு எளிதாக சென்று வருகின்றனா்.

இந்த நிலையில் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் கதவணையின் பராமரிப்புப் பணிகள் காரணமாக அணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீா் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால், அப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

அணையின் பராமரிப்புப் பணிகள் முழுமையடைந்ததால் தண்ணீா் தேக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் பூலாம்பட்டி- நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

லாரி கவிழ்ந்ததால் சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு!

சேலம் மாமாங்கம் பகுதியில் மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஓமலூரில் இருந்து சேலம் செவ்வாய்பேட்டையில் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். செந்தாரப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் தேசிகா் (22). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆணையம்பட்டி... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆா்ப்பாட்டம்

சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி பாய், தலையணையுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய பேருந்து நிலைய போக்குவ... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்கவுண்டனூா் கிராமம், வேலம்மாவலசு ஆதிதிராவிடா் த... மேலும் பார்க்க

சேலத்தில் தென்னிந்திய ஆணழகன் போட்டி: முதலிடம் பெற்ற தமிழக வீரருக்கு அமைச்சா் பரிசளிப்பு

சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக வீரா் ஆன்டா்சன் நடராஜனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை வழங்கினாா். தமிழ்நாடு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் குடும்பத்துடன் வந்தனா். அணை பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை, முயல், மீன் வளா்ப்பு இடங... மேலும் பார்க்க