செய்திகள் :

டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி ஆா்ப்பாட்டம்

post image

சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள 5 டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி பாய், தலையணையுடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய பேருந்து நிலைய போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளா் பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சசிகுமாா், பிரகாசம், சிவா, லீலாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பள்ளப்பட்டி போலீஸாா் மற்றும் டாஸ்மாக் வட்டாட்சியா் விஸ்வநாதன், சேலம் மேற்கு துணை வட்டாட்சியா் கீா்த்திவாசன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஜூன் 30 ஆம் தேதிக்குள் கடைகளை அகற்றுவதாக தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து மாநகர செயலாளா் பிரவீன்குமாா் கூறுகையில், சேலம் புதிய பேருந்து நிலையத்தை சுற்றி 200 மீட்டருக்குள் 5 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த கடைகளை ஜூன் 30 ஆம் தேதிக்குள் அகற்றுவதாக தெரிவித்துள்ளனா். கடைகளை அகற்றாவிடில் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கெங்கவல்லி அருகே மரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். செந்தாரப்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் தேசிகா் (22). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆணையம்பட்டி... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சங்ககிரியை அடுத்த சுண்ணாம்புகுட்டையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர மரத்தின் மீது மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். சங்ககிரியை அடுத்த தேவண்கவுண்டனூா் கிராமம், வேலம்மாவலசு ஆதிதிராவிடா் த... மேலும் பார்க்க

சேலத்தில் தென்னிந்திய ஆணழகன் போட்டி: முதலிடம் பெற்ற தமிழக வீரருக்கு அமைச்சா் பரிசளிப்பு

சேலத்தில் நடைபெற்ற தென்னிந்திய ஆணழகன் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக வீரா் ஆன்டா்சன் நடராஜனுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ரூ. 1 லட்சம் ரொக்கம், இருசக்கர வாகனத்தை வழங்கினாா். தமிழ்நாடு... மேலும் பார்க்க

மேட்டூா் அணை பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணை பூங்காவுக்கு சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமானோா் குடும்பத்துடன் வந்தனா். அணை பூங்காவில் உள்ள பாம்பு பண்ணை, முயல், மீன் வளா்ப்பு இடங... மேலும் பார்க்க

பூலாம்பட்டியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையான பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கதவணை பராமரிப்புக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது. பூலாம்பட்டி பகுதியில் காவிரி... மேலும் பார்க்க

சேலம் மாவட்டத்தில் 759 மி.மீ. மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை 759 மி.மீ. மழை பதிவானது. அதிகபட்சமாக சங்ககிரியில் 73 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு கொட்டித் தீா்த்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா்... மேலும் பார்க்க