செய்திகள் :

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

post image

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.

கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாநிலத்துக்கான விளையாட்டு காம்ப்ளக்ஸ், 80,000 பேர் உட்கார்ந்து பார்க்ககூடிய கிரிக்கெட் திடலும் அடங்கியிருக்கின்றன.

பொம்மசந்திராவில், சூர்யா சிட்டி புறநகர் பகுதியில் இந்த கிரிக்கெட் திடல் அமையவிருக்கிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கிரிக்கெட் திடலாக இது அமையவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பெரிய கிரிக்கெட் திடல்

முன்னதாக குஜராத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் அதிகமான பார்வையாளர்கள் (1.32 லட்சம்) உட்காரும் இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சின்னசாமி திடலில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த 11 உயிரிழப்புகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை விசாரித்த மைக்கேல் குன்ஹா இந்தத் திடல் வெறுமனே 32,000 பேர் மட்டுமே பார்க்க முடியும். அதிகமானோர் கூடுவதற்கு ஏற்றதல்ல என அறிக்கையை தாக்கல் செய்தார். அதனால், புதிய இடத்துக்கு திடலை மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

100 ஏக்கர் பரப்பளவில்... ரூ.1,650 கோடி செலவில்

இந்தத் திட்டத்துக்கு 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

மாநில அரசின் உதவி இல்லாமல் கர்நாடக வீட்டுவசதி வாரியமே இதனை செய்து முடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடலில் 8 இன்டோர், அவுட்டோர் விளையாட்டுகள், பயிற்சிக்கான வசதிகள், விடுதிகள், நீச்சல்குளம், நிக்ழ்சிகளுக்கான மேடைகள் என உருவாக்கப்படவிருக்கிறது.

இது மட்டுமில்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் விதமாகவும் ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

டிம் டேவிட், ஹேசில்வுட் அசத்தல்: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில்... மேலும் பார்க்க

வெற்றி பெறுவோம் என தொடர்ந்து நம்பிக்கையளித்த முகமது சிராஜ்; மனம் திறந்த ஆகாஷ் தீப்!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெறுவோம் என முகமது சிராஜ் தொடர்ந்து நம்பிக்கையளித்ததாக வேகப் பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் பேசியுள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து... மேலும் பார்க்க

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பின் ரோஹித், கோலி ஓய்வா? சௌரவ் கங்குலி பதில்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் மூத்... மேலும் பார்க்க

ஆஸி.யை முதல்முறையாக ஆல் அவுட் செய்த தெ.ஆ.: சதமடிக்க தவறிய டிம் டேவிட், ஆஸி. 178 ரன்கள்!

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவாரா?

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயாராக இருப்பதாக மார்னஸ் லபுஷேன் தெரிவித்துள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் தொடர்ச்சியாக... மேலும் பார்க்க

சரிவிலிருந்து மீட்ட டிம் டேவிட்... 109 மீட்டருக்கு சிக்ஸர்!

ஆஸ்திரேலிய பேட்டர் டிம் டேவிட் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டி20யில் டாஸ் வென்ற தெ... மேலும் பார்க்க