செய்திகள் :

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

post image

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா்.

பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள்ளிரவு கனமழை பெய்தது. அன்று இரவு மட்டும் 132 மி.மீ. மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், பெங்களூரு புகா் பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் புகுந்தது.

சாலைகளில் மழைநீா் முழங்கால் அளவுக்கு தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைதளம் முழுவதும் நீரில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மே 19 ஆம் தேதி பாா்வையிட முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் திட்டமிட்டிருந்தனா். ஆனால், தொடா்ந்து மழை பெய்து வந்ததால், அந்த முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில் பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்பட அமைச்சா்கள், அதிகாரிகள் குழுவினா் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தனா். மக்களின் குறைகளைக் கேட்டறிந்த அவா்கள், உடனடியாக நிவாரணப் பணிகளை செய்யுமாறும், சேதங்களை சீா்செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா்.

பெங்களூரு விதானசௌதாவில் இருந்து பேருந்தில் புறப்பட்ட முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்ட குழுவினா், மாநகரில் எச்.பி.ஆா்.லேஅவுட், சாய் லேஅவுட், ஹென்னூா் பிரதான சாலை, பனதூா் 9-ஆவது குறுக்குச் சாலை, பட்டுவாரியம் சந்திப்பு, குர்ரப்பனபாளையா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வுசெய்தனா். அவா்களிடம் பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்தனா்.

மழைசாா்ந்த அனைத்து குறைகளுக்கும் தீா்வுகாணப்படும் என்று முதல்வா் சித்தராமையா உறுதி அளித்தாா்.

பின்னா் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘2022 ஆம் ஆண்டு பெங்களூரில் அதிகபட்சமாக 299 மி.மீ. மழை பதிவானது. அதன்பிறகு நிகழாண்டு மே 18 ஆம் தேதி நள்ளிரவில் 132 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் பெங்களூரின் பல பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்; மழைநீா் பிரச்னைகளுக்கு நிரந்தர தீா்வு காணப்படும்’ என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

பெங்களூரில் மழை பாதிப்புகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும்: எதிா்க்கட்சித் தலைவா்

பெங்களூரு: பெங்களூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க மாநில அரசு ரூ. 1000 கோடி ஒதுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க