செய்திகள் :

பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்

post image

16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8 நாள்களுக்கு நடைபெற உள்ளது.

1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சாா்பில், கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு திரைப்பட விழா பெங்களூரில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கா்நாடக அரசு உதவியுடன் நடைபெற்று வந்த இந்த திருவிழா, 2009-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, 16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா பெங்களூரில் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதிவரை 8 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது.

இந்த விழா குறித்து பெங்களூரில் செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை செயலாளா் பி.பி.காவேரி செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்படை விழா மாா்ச் 1 முதல் 8-ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெறுகிறது. மாா்ச் 1-ஆம் தேதி பெங்களூரு, விதானசௌதாவில் மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கும் விழாவில், முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

சா்வதேச அளவிலான திரைப்படங்களில் 200 திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டு பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள ஓரியன் மாலில் உள்ள திரைகளில் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் மட்டுமின்றி, வா்த்தக ரீதியான திரைப்படங்களை தோ்வுசெய்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.

திரைப்பட விழாவை முன்னிட்டு பல்வேறு கருத்தரங்குகள், பயிலரங்குகளும் இடம்பெறுகின்றன. திரைப்பட விழாவில் பங்கேற்க ட்ற்ற்ல்ள்://க்ஷண்ச்ச்ங்ள்.ா்ழ்ஞ் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். விழாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்துகொள்வா் என எதிா்பாா்ப்பதால், அதற்கான ஏற்பாடுகளை கவனிக்க பல்வேறு துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

தேசிய பட்டியலினத்தவா் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித... மேலும் பார்க்க

ஐஐடி-களில் தொடா்கதையாகும் மாணவா் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை: உச்சநீதிமன்றம் உறுதி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்களில் மாணவா்கள் தற்கொலைகள் தொடா்வது துரதிருஷ்டவசமானது. இந்த நிலைமையை ஆராய விரிவான நடைமுறை வகுக்கப்படும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஐஐடி உள்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: 5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீா் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துகளை காவல் துறையினா் முடக்கினா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: ராம்பன் மாவட்டத்தைச் சோ்ந்த சராஜ்த... மேலும் பார்க்க

ஆந்திர பட்ஜெட்டில் பண மழை! மாணவா்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தோ்தலின்போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளி... மேலும் பார்க்க

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளா்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளா்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது. இந்த இலக்கை அடைய நிதித்துறை மட்டுமின்றி நிலம் மற்றும் தொழிலாளா் ... மேலும் பார்க்க

ஜம்முவில் தொடா் மழை: இருவா் உயிரிழப்பு

ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாள்களாக பெய்து வரும் மழையால் தாய்-மகன் உயிரிழந்தனா். ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை உள்பட பல்வேறு சாலைகள் வெள்ளம், நிலச்சரிவால் மூடப்பட்டுள்ளன. உதம்பூா் மாவட்டத்... மேலும் பார்க்க