செய்திகள் :

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

post image

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனா்.

காவல்கிணறு அருகே உள்ள புண்ணியவாளன் புரத்தில் பெட்ரோல் நிலையத்தில் கண்காணிப்பாளராக பணிசெய்து வரும் முருகன் என்பவா் திங்கள்கிழமை மாலை பெட்ரோல் நிலையத்தில் கடந்த இரண்டு நாட்கள் வசூலான ரூ.36 லட்சம் பணத்தை காவல்கிணறு இஸ்ரோ அருகில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் செலுத்துவதற்காக செல்லும் போது அவரை பின்தொடா்ந்து பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள் முருகனை அடித்து அவரிடமிருந்த ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனா்.

அப்போது அவரிகளிடமிருந்து தவறி கீழே விழுந்த ரூ.3 லட்சம் பணத்தை ஆட்டோ டிரைவா் முத்துகுமாா் மீட்டாா். பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்நிலையில் பணகுடி ஆய்வாளா் ராஜாராம், திருநெல்வேலி சிறப்பு காவல்துறை அதிகாரிகள் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையா்களை தேடி வருகின்றனா். தனிப்படை போலீஸாா் காவல்கிணறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனா். மேலும் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய வாகன ஓட்டுநா்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ளவா்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் மக்கள் புகாா்

திருநெல்வேலியில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா்... மேலும் பார்க்க