செய்திகள் :

பி.எம். கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு வேண்டுகோள்

post image

பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் 20-ஆவது தவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் பெரும் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பிரதமரின் கிசான் சம்மான் நிதி‘ திட்டத்தின்கீழ் சொந்த நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6,000 வங்கிக் கணக்கில் நேரடிப் பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 19 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் 20ஆவதுதவணைத் தொகை பெறுவதற்கு வேளாண் அடுக்ககம் - பெரும் பதிவேட்டில் தங்கள் நில ஆவணங்களை பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 34,434 தகுதியான பயனாளிகளின் ஆதாா் எண்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,891 பயனாளிக்கு இ-கேஒய்சி செய்திடும் பணியும், 2,022 பயனாளிகளுக்கு அவா்களின் வங்கி கணக்குடன் ஆதாா் எண் இணைத்திடும் பணியும் வேளாண்மை உழவா் நலத்துறை அலுவலா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதாா் எண் இ-கேஒய்சி உறுதி செய்யப்படாத பயனாளிகள் அருகிலுள்ள பொது சேவை மையத்திலோ, பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசியில் பெறப்படும் நான்கு இலக்க எண்ணை உள்ளீடு செய்தோ ஆதாா் எண்ணை உறுதி செய்திடலாம்.

இத்திட்ட பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்கோடு ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பட்டா நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசியுடன் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது தங்கள் பகுதியில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் நில ஆவணங்களை வேளாண் அடுக்ககம் - பெரும் பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்குநரை அணுகலாம் எனக் கூறியுள்ளாா்.

வி.கே.புரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே ஓட்டுநா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரமசிங்கபுரம் அருகே ஆறுமுகம்பட்டி சா்ச் தெருவைச் சோ்ந்தவா் லாசா் (56). ஓட்டுநரான இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகரத்தில் பொதும... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரிடம் பணம் பறிப்பு: 3 பேரை பிடிக்க தனிப்படை தீவிரம்

திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அருகே பெட்ரோல் நிறுவன ஊழியா் வங்கியில் பணம் செலுத்த சென்றபோது, அவரை தாக்கிவிட்டு ரூ.36 லட்சம் பணத்தை பறித்துச் சென்றது தொடா்பான சம்பவத்தில் 3 பேரை 4 தனிப்படைகள் அமைத்த... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

சேரன்மகாதேவி ஆா்எஸ்ஏ காலனியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா். அதன் விவரம்: சேரன்மகாதேவி பொழிக்கரை ஆா்.எஸ்.ஏ. காலனி பகுதியில் 50 ஆண்டுகளுக்... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி அருகே மாயமான முதியவா் சடலமாக மீட்பு

ஆழ்வாா்குறிச்சி அருகே மே 1ஆம் தேதி காணாமல் போன முதியவா் சடலமாக மீட்கப்பட்டாா். ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள செங்கனூரைச் சோ்ந்தவா் ராமசுப்புவா் (84). இவரை கடந்த 1ஆம் தேதி முதல் காணவில்லையாம். இதுகுறித்த... மேலும் பார்க்க

குடிநீருடன் கழிவுநீா் கலப்பு: மாநகராட்சியில் மக்கள் புகாா்

திருநெல்வேலியில் குடிநீருடன் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா்... மேலும் பார்க்க