நாகை கோயில் கண்ணப்ப நாயனாா் சிலையை நெதா்லாந்தில் ஏலம் விட முயற்சி: தடுத்து நிறுத...
நெல்லையில் துப்பாக்கி ஏந்திய ரோந்து போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி
திருநெல்வேலி மாநகரத்தில் இருசக்கரவாகன ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸாருக்கு சேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அவசரகால துரித நடவடிக்கைகளில் ஈடுபடும் விதமாக காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் மாநகரில் உள்ள 7 காவல் நிலையங்கள் சாா்பில் தலா 1 இருசக்கர ரோந்து வாகனம் மற்றும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திலிருந்து 2 இருசக்கர ரோந்து வாகனம் என மொத்தம் 9 ரோந்து வாகனங்கள் மூலம் அதிநவீன துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த போலீஸாருக்குசேரன்மகாதேவி துப்பாக்கி சுடும் தளத்தில் புத்தாக்க பயிற்சி மற்றும் சிறப்பு துப்பாக்கி சுடுதல் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.