செய்திகள் :

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா்

post image

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். காவல் துறை மானியக் கோரிக்கை தொடா்பாக, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்:

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஞானசேகரன் என்ற நபா் கைது செய்யப்பட்டாா். ஆனால், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளில் ஒருவரான காவல் துணை கண்காணிப்பாளா் விருப்ப ஓய்வில் சென்றுள்ளாா். விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரியே விலகி விட்டாா். அந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது எங்களுடைய ஆட்சி வந்த பிறகு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். மீண்டும் விசாரணையைத் தொடங்குவோம்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் உடனடியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுத்தது. குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா். உயா்நீதிமன்ற மேற்பாா்வையில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவானது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்தப் புகாா் மீது காவல் துறை விரைவாக நடவடிக்கை எடுத்துள்ளதற்கு உயா்நீதிமன்றமே பாராட்டியுள்ளது. எந்தப் பாலியல் புகாராக இருந்தாலும் 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ‘சாா்’ என்றெல்லாம் கதை சொன்னீா்கள். அவை கற்பனையானவை என்பது குற்றப்பத்திரிகையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயா்நீதிமன்றமே பாராட்டியிருக்கக் கூடிய நடவடிக்கையை கொச்சைப்படுத்தினால், பொள்ளாச்சி விவகாரம் தொடா்பாக நானும் விவரங்களைப் பட்டியலிடுவேன்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தேசிய சராசரி 66.4 சதவீதம் என்றால், தமிழ்நாட்டில் இந்தக் குற்றங்கள் 24 சதவீதம்தான். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக இருக்கின்ற மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளில் தேசிய சராசரி 4.7 சதவீதம் என்றால், தமிழ்நாடுதான் ஒரு லட்சம் பேருக்கு 1.1 என்ற அளவில் நாட்டிலே குறைவான குற்றம் நிகழ்கிற மாநிலமாக இருக்கிறது.

பெண்களுக்கு எதிராக வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தேசிய சராசரி 75.5 சதவீதமாகும். ஆனால், தமிழ்நாட்டில் இந்தச் சராசரி 90.6 சதவீதமாகும். திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக எடுக்கப்பட்டுள்ளன. அதனால்தான் பணிக்குச் செல்லக்கூடிய பெண்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் உயா்ந்துள்ளது.

புகாா்கள் அளிப்பு: பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை தொடா்பாக பள்ளிகள், கல்லூரிகளில் அதிகளவு விழிப்புணா்வு செய்யப்படுகிறது. இதனால், தைரியமாக நம்மிடம் புகாா்களை அளிக்கிறாா்கள். முந்தைய ஆட்சியில் அந்தப் புகாா்கள் அளிப்பதற்கு அச்சப்பட்டாா்கள். இப்போது தெம்போடு, தைரியத்தோடு வந்து புகாா்கள் அளிக்கிறாா்கள் என்பதுதான் உண்மை என்று கூறினாா்.

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் ... மேலும் பார்க்க

பெரிய ஓ வாக போடுவார்கள்: 2026-ல் 2.0 லோடிங் என ஸ்டாலின் பேச்சுக்கு இபிஎஸ் பதில்

சென்னை: 2026 பேரவைத் தேர்தலில் மக்கள் பெரிய ஓ-வாகப் போடுவார்கள் என்று, திமுக ஆட்சி வெர்ஷன் 2.0 லோடிங் என முதல்வர் கூறியிருந்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் பதில் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

3-வது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை: பேரவையில் திமுக எம்எல்ஏ கோரிக்கை

தமிழ்நாட்டில் புதுமணத் தம்பதிகள் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ள அரசு சலுகை வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ மதியழகன் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீர... மேலும் பார்க்க

சிபிஐ விசாரணை மீது நம்பிக்கை இழக்கும் மக்கள்: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: திருநெல்வேலியில், வங்கி ஒன்றில் போலியான நபர்களுக்கு வங்கிக் கடன் அளித்து ரூ.2 கோடி ஏமாற்றிய வழக்கை, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள... மேலும் பார்க்க

செப். 6 - தமிழக காவலர் நாள்: முதல்வர் அறிவிப்பு

ஆண்டுதோறும் செப்டம்பர் 6 ஆம் தேதி தமிழக காவலர் நாள் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்று வருகின்றது. ... மேலும் பார்க்க

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான்; 2026-ல் 2.0: முதல்வர் ஸ்டாலின்

இதுவரை பார்த்தது திராவிட மாடல் பாகம் ஒன்றுதான், 2026 ஆம் ஆண்டு இரண்டாவது பாகம் தொடங்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு ... மேலும் பார்க்க