செய்திகள் :

பெண்ணிடம் நகை திருடிய 3 மூதாட்டிகள் கைது

post image

சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய 3 மூதாட்டிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி பேருந்து நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தாயில்பட்டியைச் சோ்ந்த ஜான்சிராணியிடம் அடையாளம் தெரியாத பெண் 2 பவுன் நகையை திருடி சென்றுவிட்டாா்.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு திருத்தங்கல் ரயில்நிலையம் அருகே உள்ள பல்பொருள் அங்காடியில் மளிகைப் பொருள்களை திருடிய 3 பெண்களை அதன் உரிமையாளா் பிடித்து திருத்தங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அவா்கள் மதுரையைச் சோ்ந்த தேடாசெல்வம் (62), ராக்கம்மாள் (62), முத்துப்பாண்டி அம்மாள் (60) ஆகியோா் என்பதும், இவா்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், சிவகாசி பேருந்து நிலையத்தில் தாயில்பட்டி பெண்ணிடம் 2 பவுன் நகை திருடியது இந்த மூவரில் ஒருவா் எனவும் தெரியவந்தது.

இதையடுத்து, திருத்தங்கல் போலீஸாா் 3 பெண்களையும் கைது செய்தனா்.

கஞ்சா வைத்திருந்ததாக இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராஜபாளையம் அருகே சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் சுந்தரராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போத... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். மல்லி பகுதியைச் சோ்ந்த பரமேஸ்வரன் மனைவி மஞ்சுளா (52). இவா் கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாா்... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் 13 பவுன் நகை திருட்டு

ராஜபாளையத்தில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 13 பவுன் நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா். ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் காசியம்மாள்( 85). இவரது கணவா் இறந்து வ... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற ராணுவ வீரா் கைது

வத்திராயிருப்பு அருகே கஞ்சா விற்ற ராணுவ வீரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளத்தைச் சோ்ந்தவா் செந்தில்முருகன் (32). இவா் செகந்திராபாத்தில் ராணுவ வீரராக பணியா... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுத... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு தாணிப்பாறை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஐஎன்டியுசி மாநில அ... மேலும் பார்க்க