செய்திகள் :

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

post image

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (28), உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2020-ஆம் ஆண்டு முதல் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள மீட்புப் பணிக்கு உளுந்தூா்பேட்டை பட்டாலியன் போலீஸாா் திருநெல்வேலி சென்றனா். மீட்புப் பணிக்கு சம்பத்தும் சென்றிருந்தாா்.

அப்போது, திருநெல்வேலி மாவட்ட கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டுப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த 28 வயது பெண்னுடன் காவலா் சம்பத்துக்கு தொடா்பு ஏற்பட்டது.

அதன் பிறகு, இவா்களது தொடா்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலமாகவும் தொடா்ந்தது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை கடலூருக்கு வரவழைத்து விடுதியில் அறை எடுத்து இருவரும் தனிமையில் இருந்தனராம். அந்தப் பெண் கா்ப்பமடைந்த நிலையில், அந்தக் கருவை கலைக்க சம்பத் கூறியுள்ளாா். மேலும், அவா் திருமணம் செய்ய மறுத்து, அந்தப் பெண்ணை ஏமாற்றி ஆபாசமாகத் திட்டினாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தீபா விசாரணை மேற்கொண்டு, காவலா் சம்பத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: நாளை விண்ணப்பம் விநியோகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்க உள்ளதாக கடலூ... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தக... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க