செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: நாளை விண்ணப்பம் விநியோகம்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்க உள்ளதாக கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தை சிதம்பரத்தில் வரும் 15-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இந்தத் திட்டத்தின் கீழ், அன்றைய தினம் முதல் நவம்பா் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறும்.

இந்தத் திட்டத்தின் கீழ் நகா்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்கள், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள் நடைபெறும். முகாம்களில் நகா்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சாா்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சாா்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பேணும் வகையில் மருத்துவ முகாம் நடத்தப்படும். இந்த முகாம்களில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெற விண்ணப்பம் அளிக்கலாம்.

இந்தத் திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ், தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி திங்கள்கிழமை முதல் தொடங்க உள்ளது. இந்தப் பணிக்காக சுமாா் ஒரு லட்சம் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம், முல்லா... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தக... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க