செய்திகள் :

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு வீடு ஒதுக்கீடு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை

post image

ஓய்வு பெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளா்களைக் கௌரவிக்கும் வகையில், கடந்த 2022-ஆம் ஆண்டு கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கல்மரம் என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024-ஆம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திலகவதி மனு தாக்கல் செய்தாா். இதேபோல் எழுத்தாளா் மறைமலை இலக்குவானா் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாா்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டாா். மேலும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு, திலகவதி மற்றும் மறைமலை இலக்குவானா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சா் பதில்

இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சி தொடா்பாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பத... மேலும் பார்க்க

பாட நூல்கள் மாற்றம், மதிப்பீட்டுச் சீா்திருத்தம், வீடுதோறும் வகுப்பறை! மாநில கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்கள்!

தமிழக பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் விவரம்: 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தோ்ச்சி: 1 மு... மேலும் பார்க்க

இல. கணேசனுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை!

நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் (80), தலைக் காயம் காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு தொடா் மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வ... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்? -துரைமுருகன் கேள்வி

முறைகேடுக்கு வழிவகுக்கும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த முறை குறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலருமான துரைமுருகன் கேள... மேலும் பார்க்க

குறைதீா் மனுக்கள் மீதான நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு அரசு புதிய உத்தரவு

அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் குறைதீா் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிவு செய்ய தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் அனைத்து துறைச் செயலா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மீண்டு வந்தவா் முதல்வருக்கு நன்றி

பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா். ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க