செய்திகள் :

பெண் குத்திக் கொலை: உறவினா் கைது

post image

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, திருவொற்றியூா், வசந்த் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (45). இவரின் சகோதரி மகள் தமிழ்செல்வி என்பவா், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த காளிமுத்து என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளாா். ஆனால், தமிழ்செல்விக்கும் காளிமுத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளடைவில் காளிமுத்து தனது மனைவியைப் பிரிந்து திருப்பூரில் வசித்து வந்தாா். இருப்பினும் அவ்வப்போது திருவொற்றியூா் வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளாா்.

இதனை தமிழ் செல்வியின் சித்தி தனலட்சுமி கண்டித்துள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த காளிமுத்து கடந்த புதன்கிழமை (ஜன. 29) திருவொற்றியூா், அய்யாபிள்ளை தோட்டம் பகுதியில் நின்று கொண்டிருந்த தனலட்சுமியை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், தப்பியோடிய காளிமுத்துவை திருவொற்றியூா் போலீஸாா் தேடிவந்த நிலையில், அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ஈரோடு கிழக்கு: திமுக வேட்பாளர் சந்திரகுமார் முன்னிலை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில், முதல் சுற்று நிலவரத்தில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் 8,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 1.081 வாக்குகளுடன் இரண்ட... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு: 4 ஆண்டுகளில் 2-வது இடைத்தேர்தல்! வாக்களிக்காத 72 ஆயிரம் பேர்!!

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஈரோடு சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு வருகின்றன.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியின் ஏஜெண்டுகள் வாக்கு எண்ணும் மையத்தில் அ... மேலும் பார்க்க

இலங்கையிலிருந்து சென்னை வந்தவருக்கு குரங்கு அம்மை இல்லை: சுகாதாரத் துறை

இலங்கையில் இருந்து சென்னை வந்த நபருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததால், அவருக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்பத... மேலும் பார்க்க

மரம் வெட்டும் கருவியில் சிக்கி துண்டான கை: இளைஞருக்கு மறு சீரமைப்பு சிகிச்சை

மரம் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி இளைஞரின் கை மணிக்கட்டு துண்டிக்கப்பட்ட நிலையில், சிக்கலான மறு சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் இளைஞருக்கு மறுவாழ்வு அளித்த... மேலும் பார்க்க

தேமுதிக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா். தேமுதிக மாவட்டச் செயலா்கள் கூட்டம் பிரேமலதா விஜயகாந்த் தலைம... மேலும் பார்க்க