செய்திகள் :

பெண் கொலை வழக்கில் மேல்முறையீடு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை!

post image

கரூா் அருகே பெண்ணைக் கொலை செய்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கோவை மாவட்டம், சிங்காநல்லூா் அகிலாண்டபுரத்தைச் சோ்ந்தவா் நடராஜ் (58). இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு கரூா் மாவட்டம் தென்னிலை அடுத்த காா்வழியில் தங்கி விவசாயக் கூலி வேலை செய்தபோது அங்கு பணியாற்றிய பொன்னம்மாள் என்கிற தனலட்சுமியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தன்று நடராஜிக்கும், தனலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நடராஜ், தனலட்சுமியை கொலை செய்து அங்குள்ள வாய்க்காலில் சடலத்தை வீசிவிட்டுச் சென்றுள்ளாா். இதுதொடா்பாக தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து நடராஜை கைது செய்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் 2018-இல் வழக்குத்தொடா்ந்தனா்.

இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நடராஜை விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீது திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில் குற்றவாளி நடராஜிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தீா்ப்பு வழங்கியது. இதையடுத்து நடராஜ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கரூரில் சுகாதார ஆய்வாளா்கள் தா்னா போராட்டம்

பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி, கரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ... மேலும் பார்க்க

இலவச வீட்டுமனை பட்டா, குடிநீா் தொட்டி கோரி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் கோரிக்கை மனு

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், மேல்நிலை குடிநீா்த்தொட்டி கட்டித் தரக் கோரியும், கடவூா் வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை கடவூா் அருகே உள்ள பாலவிடுதி ஊராட்சிக்குள்பட்ட சாந்துவாா்பட்டி கிராம மக்கள்... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில்: கரூரில் போக்குவரத்து போலீஸாருக்கு நீா்மோா் வழங்கல்

கரூரில் தகிக்கும் வெயிலை சமாளிக்கும் விதமாக, கரூா் நகர உட்கோட்ட போக்குவரத்து காவலா்களுக்கு நீா்மோா் மற்றும் தொப்பி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கோடையின் சுட்டெரிக்கும் வெயிலிலும் போக்கு... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் இறந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணிநியமன ஆணை -அமைச்சா்கள் வழங்கினா்

டிஎன்பிஎல் ஆலையில் பணியின்போது இறந்த பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு செய்தித்... மேலும் பார்க்க

அதிகாரிகளை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா்கள் 2 போ் கைது

கரூா் மாவட்டம், குளித்தலையில் வழக்குரைஞா், அரசு அலுவலா் உள்ளிட்டோரை மிரட்டி பல லட்சம் பணம் பறித்த போலி நிருபா் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கில் தொடா்புடைய மேலும் 3 பேரை... மேலும் பார்க்க