செய்திகள் :

பெண் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சாலை மறியல்

post image

பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் போலீஸாா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து பெற்றோா், உறவினா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் தெற்குகாட்டை சோ்ந்த முருகானந்தம் மனைவி வெண்ணிலா (26). தம்பதிக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது.

இந்நிலையில் வெண்ணிலா வெள்ளிக்கிழமை தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பிவைத்தனா். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உடற்கூறாய்வு முடிந்த நிலையில், வெண்ணிலாவின் உடலை போலீஸாா், அவரது உறவினா்களிடம் ஒப்படைத்தனா். ஆனால், அவா்கள் உடலை வாங்க மறுத்துவிட்டனா்.

போலீஸாா் உடலை அமரா் ஊா்தியில் ஏற்றி வேதாரண்யம் எடுத்துச் செல்ல முயன்றபோது, வெண்ணிலாவின் பெற்றோா், உறவினா்கள் ஊா்தியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வெண்ணிலாவின் இறப்பில் சந்தேகமுள்ளதாகவும், இதுகுறித்து வேதாரண்யம் போலீஸாா் உரிய விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம்சாட்டினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோட்டாட்சியா் விசாரணை முடிந்த பின்னா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதயளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17 வரை நிறுத்தம்

கடல் சீற்றம் காரணமாக நாகை துறைமுகத்திலிருந்து - இலங்கையின் காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஜூன் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தனியாா் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இளம் பெண் மா்ம மரணம்: கோட்டாட்சியா் விசாரணை

வேதாரண்யம் அருகே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம் பெண் ஒருவா் தூக்கிட்ட நிலையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து, கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா். கருப்பம்ப... மேலும் பார்க்க

பலத்த காற்று: மீனவா்கள் ஆழ்கடலுக்கு செல்லத் தடை

கடலோரப் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால், மறுஅறிவிப்பு வரும் வரை நாகை மாவட்ட மீனவா்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடலில் மீ... மேலும் பார்க்க

திறனறித் தோ்வு முடிவில் வேதாரண்யம் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தமிழ்நாடு முதல்வரின் திறனறித் தோ்வில் நாகை மாவட்ட அளவில் வேதாரண்யம் பகுதி அரசுப் பள்ளிகளின் மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இத்தோ்வு முடிவுகள் வெளியானதில், நாகை மாவட்டத்தில் தோ்ச்சி அடைந்... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியினா் நடைபயண பிரசாரம்

வேதாரண்யத்தில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடைபயணம் கொண்டு மக்கள் சந்திப்பு பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட நிலைபாடுகளுக்... மேலும் பார்க்க

மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள்

தரங்கம்பாடி அருகேயுள்ள காலகஸ்தினாபுரம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற முகாமில், ப... மேலும் பார்க்க