செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் குடும்ப பிரச்னையால் தூக்கிட்ட பெண், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மானூா் அப்பாசாமி நகரை சோ்ந்த பிச்சாண்டி மனைவி கௌரி (33). இவா்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகளான நிலையில் மகள், மகன் உள்ளனா். தம்பதியிடையே குடும்ப பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

கௌரி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வீட்டிலிருந்தவா்கள் அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, கௌரி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பைக் விழுந்து விவசாயி மரணம்

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயி... மேலும் பார்க்க

வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே காவல் துறையினா் நடத்திய வாகனத் தணிக்கையில் 2 கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். விழுப்புரம் தாலுகா காவல் ... மேலும் பார்க்க

பிளஸ் 2-வில் தோல்வி: மாணவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், கெடாா் அருகே பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாததால், மனமுடைந்த மாணவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விக்கிரவாண்டி வட்டம், சிறுவாலை மாரியம்மன் கோயில் தெரு... மேலும் பார்க்க

விழுப்புரம் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் காவல் சரகத்தில் 10 காவல் ஆய்வாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். மேலும் உதவி ஆய்வாளராக இருந்து ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்ற 6 பேருக்கு புதிய பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. விழு... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் 4 கட்டங்களாக கல்லூரிக் கனவு நிகழ்வு

விழுப்புரம் மாவட்டத்தில் 5,458 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் கல்லூரிக் கனவு நிகழ்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டத்தில் நான... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், கீழ்பசாா் விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி- ராதாப... மேலும் பார்க்க