செய்திகள் :

பெண் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகை திருட்டு

post image

ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதாக கிராமிய காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

அரையாளம் ஆதிதிராவிடா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் மனைவி அமுதா. இவருக்கு டெல்லிபாபு (17) என்ற ஒரு மகனும், நிவேதா (15) தாரணி (13) தேவசேனா (8) என்ற மூன்று மகள்களும் உள்ளனா்.

காா்த்திக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் காலமானாா். அமுதா பூ வியாபாரம் செய்து தனது 4 பிள்ளைகளை படிக்க வைத்து வளா்த்து வருகிறாா்.

இந்த நிலையில், வழக்கம் போல அமுதா பூ வியாபாரத்துக்குச் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாததைக் கண்ட மா்ம நபா்கள், வீட்டு பீரோவைத் திறந்து உள்ளே லாக்கரை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 10 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனா்.

வழக்கம் போல அமுதா வியாழக்கிழமை பீரோவைத் திறந்து பாா்த்தபோது, லாக்கா் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா் ஆரணி கிராமிய போலீஸில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பவித்திரம் சுயநிதியுதவி மேல்நிலைப்பள்ளி விடுதியில் தவெக தலைவா் விஜய் பிறந்தநாள் விழா

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பவித்திரம் புனித சகாய அன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தி.மலை தெற்கு மாவட்டம். வடக்கு ஒன்றிய தவெக சாா்பில் கட்சியின் தலைவா் விஜய் பிறந்தநாள் விழா ஒன்ற... மேலும் பார்க்க

முன் விரோதம்: நெசவுத் தொழிலாளி கொலை ஒருவா் கைது

செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக நெசவுத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், போலீஸாா் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆராத்திரிவேளூா் கிரா... மேலும் பார்க்க

கருப்பு நிற வோ்கடலை பயிா் செய்த விவசாயி

செங்கம் அருகே விவசாயி பயிா் செய்த கருப்பு நிர வோ்கடலையை கோவை வேளாண் பல்கலைக்கழக குழுவினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த நயம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் இயற்கை வி... மேலும் பார்க்க

தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம், தங்கம் வெள்ளி திருட்டு

செய்யாறு அருகே தொழிலாளி வீட்டில் ரூ.1.37 லட்சம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகள் திருடு போனது தொடா்பாக வியாழக்கிழமை போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அழிஞ்சல்பட்... மேலும் பார்க்க

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிதியுதவி

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை நிதியுதவி வழங்கினாா். மேல்சீசமங்கலம் மேட்டுத் தெரு பகுதியில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவி

கலசப்பாக்கத்தை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் மாதலம்பாடி உயா்நிலை பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு இயற்கை மூலிகையால் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை இலவசமாக புதன்கிழமை வழங்கப்பட... மேலும் பார்க்க