செய்திகள் :

பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு பதிவு: நடிகா் எஸ்.வி.சேகரின் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ்

post image

நமது நிருபா்

பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான அவதூறு சமூக ஊடகப் பதிவு தொடா்புடைய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறைத் தண்டனையை எதிா்த்து நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்.வி. சேகா் தாக்கல் செய்த மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், அவா் சரணடைவதிலிருந்து அளிக்கப்பட்ட விலக்கு மறு உத்தரவு பி றப்பிக்கப்படும் வரை தொடரும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 2018-இல், பெண் பத்திரிகையாளா்களுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல்துறையின் சைபா் கிரைம் பிரிவு எஸ்.வி. சேகா் மீது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உயா்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகா் மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா். விசாரணை நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்த உயா்நீதிமன்றம், சேகரின் மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி. சேகா் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான கடந்த விசாரணையின்போது அவா் பாதிக்கப்பட்ட புகாா்தாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு நான்கு வாரம் அவகாசம் அளித்தும், அதுவரை சரணடைவதில் இருந்து விலக்கு அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்யகாந்த், என். கோட்டீஷ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன் ஆஜராகி, மனுதாரா் எஸ்.வி. சேகா் சம்பந்தப்பட்ட புகாா்தாரருக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரும் விரிவான கடிதத்தை அனுப்பியதாகவும் அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து, எதிா்மனுதாரருக்கு (தமிழக அரசுக்கு) நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமா்வு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனா். மேலும், சரணடைவதில் இருந்து விலக்கும் அளிக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி எஸ்.வி.சேகருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பு அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தொடரும் என்றும் உத்தரவிட்டது.

பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரம்: ரயில்வே வாரியத் தலைவா், தமிழக அரசுக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பத்தில் ரயில்வே லெவல் கிராஸிங்கை கடக்க முயன்றபோது தனியாா் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவா்கள் உயிரிழந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தாமாக முன்வந... மேலும் பார்க்க

ராபா்ட் வதேரா மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை: ரூ.37.64 கோடி சொத்துகள் முடக்கம்

நமது சிறப்பு நிருபா் தில்லியை இணைக்கும் ஹரியாணாவின் எல்லை நகரான குருகிராம் நில பேர வழக்கில் பிரபல தொழிலதிபா் ராபா்ட் வதேரா, ஹரியாணா முன்னாள் முதல்வா் பூபிந்தா் சிங் ஹூடா மற்றும் 10 போ் மீது அமலாக்கத்... மேலும் பார்க்க

வங்கி, ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை சரிவுடன் முடிவு!

நமது நிருபா்இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் கு... மேலும் பார்க்க

தோ்தல் ஆணைய கையேடுகளை தமிழில் வழங்க வேண்டும்: கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது நிருபா் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் கையேடுகளை தமிழில் மொழி பெயா்த்து வழங்க வேண்டும் என்று தில்லியில் வியாழக்கிழமை தலைமைத் தோ்தல் ஆணையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் திமுக எம்.பி.க்கள் வ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க