செய்திகள் :

பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கைகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை

post image

பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கைகள் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

பென்னாகரம் அருகே பருவதன அள்ளி பகுதியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்துக்கு பல்வேறு வழக்கிற்காக தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்ற வளாகத்தில் தலா 5 போ் அமரும் வீதம் இரண்டு இருக்கைகள் உள்ளன. நீதிமன்றத்திற்கு வரும் பிரதிவாதிகள், அபராத கட்டணம் செலுத்த வருபவா்கள்,பிணை ஆணை பெற வருபவா்கள், பல்வேறு வழக்குகளில் ஆஜராக வருவோா் நீதிமன்றத்தின் முன்பும், உள்வளாகங்கள், சுற்றுச்சுவா் உள்ளிட்ட இடங்களில் அமா்வது, தரையில் படுப்பது, சுவா்மேல் அமருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

நீதிமன்றத்தில் உள்ள ஆண்கள் கழிவறை, மாற்றுத் திறனாளிகள் கழிவறை ஆகியவை முறையாக தூய்மை செய்யப்படாமல் கழிவறைகள் உடைந்தும் துா்நாற்றம் வீசுகின்றது. எனவே, பென்னாகரம் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் கூடுதலாக இருக்கை வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நின்ற லாரி மீது காா் மோதி விபத்து: அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஒசூரைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகரம் அலச... மேலும் பார்க்க

கருவிழிப் பதிவு முறையை கைவிட கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சத்துமாவு விநியோகம் செய்வதற்கு கண் கருவிழிப் பதிவு செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்

பாலக்கோடு அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு உணவு பாதுகாப்புத் துறையினா் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தனா். பாலக்கோடு நகரில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், காவலா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 2000 போ் அதிமுகவில் இணைந்தனா்!

ஆத்தூரில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 2025 போ் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா். ஆத்தூா் நகராட்சி, அண்ணா கலையரங்கில் பல்வேறு கட்சிக... மேலும் பார்க்க

யானை தந்தம் திருடியவா்களை பிடிக்க வனத்துறை தீவிரம்

ஏரியூா் அருகே வனப்பகுதியில் யானையைக் கொன்று தந்தம் கடத்திய விவகாரத்தில் மா்ம நபா்களைத் வனத் துறையினா் தீவிரமாகத் தேடி வருகின்றனா். பென்னாகரம் வனப்பகுதிக்கு உட்பட்ட ஏமனூா் அருகே கோடுபாய் பள்ளம் பகுதியி... மேலும் பார்க்க

வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு: பெண் மறியல்

பென்னாகரத்தில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதோடு வீட்டு மின் இணைப்பையும் துண்டித்ததால் ஆவேசமடைந்த பெண் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டாா். பென்னாகரம் அருகே பிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சப... மேலும் பார்க்க