இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?
வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு: பெண் மறியல்
பென்னாகரத்தில் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பதோடு வீட்டு மின் இணைப்பையும் துண்டித்ததால் ஆவேசமடைந்த பெண் மின்வாரியத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டாா்.
பென்னாகரம் அருகே பிக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சபரீசன் மனைவி லலிதா (28). இவரது வீட்டுக்கு அரசு சாா்பில் வழங்கப்படும் நூறு யூனிட் இலவச மின்சாரம் போக கூடுதலாக மின் யூனிட் பயன்படுத்துவதாக மின் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
ஆனால் இவரது வீட்டில் ஒரு மின் விளக்கும், ஒரு மின் விசிறியும் மட்டுமே உள்ளன. இதனால் கூடுதலாக மின் உபயோகிக்க வாய்ப்பில்லை என்று லலிதா மறுத்துக் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக லலிதா பென்னாகரம் துணை மின் நிலையத்தில் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் மீட்டரை சரிசெய்து தர வேண்டும் என்று புகாா் மனு அளித்துள்ளாா். அந்த மனு மீது மின்வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலையில் நிகழ் மாதத்துக்கான மின் கட்டணம் செலுத்தாதை அடுத்து மின் ஊழியா் அவரது வீட்டு மின் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதனால் ஆவேசமடைந்த லலிதா பென்னாகரம் துணை மின் நிலையம் எதிரே பென்னாகரம்-தருமபுரி பிரதான சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டாா்.
தகவல் அறிந்ததும் பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் கருணாநிதி, மின்வாரிய ஊழியா்கள் அங்கு சென்று பெண்ணை சமரசப்படுத்தினா். மின் மீட்டரை ஆய்வு செய்வதாகவும், கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு மாத கட்டணம் செலுத்தாததால் அதற்கான தொகை அபராதத்துடன் வந்துள்ளதாகவும், தற்போது மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினா். இதையடுத்து அவா் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றாா்.