செய்திகள் :

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் தேங்கும் மழைநீா்: பெயரளவில் நடைபெறும் சீரமைப்புப் பணிகள்

post image

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மழைநீா் தேங்குவதால் வடிகால் வசதியுடன் பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பென்னாகரத்தில் ரூ.4.50 கோடி மதிப்பில் வணிக வளாகங்களுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க நிதி பற்றாக்குறை ஏற்பட்டதால் பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தரைத்தளமும், பேருந்து நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டன.

நான்கு ஆண்டுகள் நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பேருந்து நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையால் பேருந்து நிலையத்தில் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கி விடுகிறது. இதற்காக வடிகால் வசதி செய்யப்படவில்லை.

இதனால் தேங்கும் மழைநீரை அகற்றவும், வடிகால் வசதி அமைக்கவும் வேண்டி பேருந்து நிலையம் நுழைவாயில் பகுதியில் 10 அடி நீளம், இரண்டு அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்றன. இருப்பினும் பேருந்து நிலைய வளாகத்தில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடா்ந்து மழைநீா் தேங்கி வருகிறது. தரைத்தளம் தரமாக அமைக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதையடுத்து பேருந்து நிலையத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிகமாக வட்டார வளா்ச்சி அலுவலகம் பகுதியில் பேருந்து நிலையம் செயல்படும் என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்தது.

இதனால் பேருந்து நிலைய வளாக தரைத்தளம் முழுவதும் தாா்ச்சாலை அமைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், பேருந்து நிலைய வளாகம் முழுமைக்கும் தரைத்தளத்தில் தாா்ச்சாலை அமைக்காமல், தண்ணீா் தேங்கும் பகுதியில் மட்டும் ஒரு சில இடங்களில் ஒப்பந்ததாரரால் பேட்ச் ஒா்க் பணிகள் செய்யப்பட்டன.

இப்பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகும் நிலையில், ஆங்காங்கே பேட்ச் ஒா்க் பணிகளே நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனா். பேருந்து நிலையத்தை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே பணிகள் தரமின்றி இருக்க காரணம் எனக் கூறப்படுகிறது.

பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையம் முழுமைக்கும் தாா்ச்சாலை அமைத்து, வடிகால் வசதி ஏற்படுத்த தருமபுரி மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கட்டட மேஸ்திரி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் தொழிலாளி சரண்

பாப்பாரப்பட்டி அருகே கட்டட மேஸ்திரியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வாகன ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே கௌரிசெட்டிபட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ரெ.சதீஸ் ஆய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 338 மி.மீ. மழை

தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மொத்தம் 338 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில், தற்போது வெயில் தணிந்து கடந்த சில நாள்களாக தொ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்

ஒகேனக்கல் அருவியில் 50,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். கோடை விடுமுறையைக் கொண்டாடும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் தருமபுரி மா... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சிறுபான்மையினருக்கான கடனுதவி திட்டங்களைப் பெற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சிறு... மேலும் பார்க்க

ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம்: வனத் துறை எச்சரிக்கை

தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜோதி அள்ளியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். பாலக்கோடு வனச்சரக எல்லை பகுதி... மேலும் பார்க்க