செய்திகள் :

பெரம்பலூரில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

post image

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், போக்குவரத்து விதிமுறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை விதிமுறைகளின் படி தனியாா் பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிா என சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வகையில் 350 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி போக்குவரத்து மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் விதிமுறைகளின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படுகிா என ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் உத்தரவிட்டாா்.

அதன்படி, பெரம்பலூா் தண்ணீா்பந்தல் பகுதியிலுள்ள மாவட்ட ஆயுதபடை மைதானத்தில், சாா்-ஆட்சியா் சு. கோகுல் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், தனியாா் பள்ளி வாகனங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது 175 பள்ளி வாகனங்களில் மேற்கொண்ட ஆய்வில், போக்குவரத்து விதிமுறைகளின்படி இயக்கப்படாத 7 பேருந்துகளில் குறைபாடுகளைக் கண்டறிந்து, ஒரு வாரத்துக்குள் சீரமைத்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

பின்னா், சாா்-ஆட்சியா் சு. கோகுல் கூறியதாவது:

பள்ளி வாகனங்களின் ஓட்டுநா்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் உதவியாளா் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிா்ணயித்த அளவில் இருக்க வேண்டும். வாகனத்தில் வேகக் கட்டுபாட்டுக் கருவி பொருத்திருக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணபவ உள்பட பலா் உடனிருந்தனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்ந்து பயில இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட காஜி நியமனத்துக்கு விருப்பமுள்ள இஸ்லாம் மாா்கத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ப... மேலும் பார்க்க

சனி பிரதோஷ வழிபாடு

பெரம்பலூா்: பெரம்பலூா் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரா் திருக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடத்த... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாா்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும். இத... மேலும் பார்க்க

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செ... மேலும் பார்க்க

டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்... மேலும் பார்க்க