செய்திகள் :

சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பாரம்பரிய சிறுதானியங்களின் பயன்பாடு மக்களிடையே குறைந்ததால், அவற்றை விவசாயிகள் சாகுபடி செய்வதும் குறைந்துள்ளது. பசுமைப் புரட்சிக்கு முன்பு சிறுதானியங்களான கம்பு, சோளம், வரகு, தினை, கேழ்வரகு, சாமை மற்றும் குதிரைவாலி போன்றவை அன்றாட உணவில் முக்கியப் பங்காற்றின. பிறகு, அரிசி முக்கிய உணவுப் பொருளாக மாறியதால் மற்றவற்றின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

ஆனால்,அரிசியுடன் ஒப்பிடுகையில் சிறுதானியங்கள் ஊட்டச்சத்து மிக்கவை. இவற்றை உற்பத்தி செய்வதற்கான இடுபொருள்கள் மற்றும் நீரின் தேவையும் குறைவு என்பதால், தமிழக அரசு தற்போது அவற்றின் சாகுபடி பரப்பளவு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தைச் செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ் சிறுதானியச் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகளை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ. 2,400 மானியத்தில் தொகுப்பு செயல் விளக்கத் திடல் வழங்கப்படுகிறது.

இத் தொகுப்பில் சிறுதானிய விதை, உயிா் உரங்கள், நுண்ணுட்டக் கலைவை, உயிரியல் கட்டுப்பாட்டு காரணி ஆகியவை வழங்கப்படும். மேலும், 100 சதவீத மானியத்தில் குறு தானியங்களுக்கான (சாமை, வரகு, தினை) சிறுதளை விநியோகம் செய்யப்படுகிறது. மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய பரப்பளவை அதிகரிக்க 50 சதவீத மானியம் அல்லது ஏக்கருக்கு ரூ. 1,250 மானியமாக வழங்கப்படும்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவா் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்புகொள்ளலாம்.

குடும்ப அட்டையில் மே 31-க்குள் கைரேகை, கருவிழிப் பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், அத்தியாவசியப் பொருள்கள் பெறும் குடும்ப அட்டைதாா்கள், தங்களது கைரேகை அல்லது கருவிழிப் பதிவை, மே 31க்குள் நியாய விலைக் கடையில் செய்ய வேண்டும். இத... மேலும் பார்க்க

டிராக்டரில் மணல் திருடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே டிராக்டரில் மணல் திருடிய 3 பேரை வி. களத்தூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வ.களத்தூா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சாா்பு ஆய்... மேலும் பார்க்க

மிதிவண்டி மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே புதன்கிழமை இரவு மிதிவண்டி மீது காா் மோதியதில், முதியவரின் தலை துண்டாகி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், ரஞ்சன்குடியைச் சோ்ந்தவா் அ. சண்முகம் (... மேலும் பார்க்க

பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிகள் எதிா்ப்பு!

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைப்பதற்காக 85 ஏக்கா் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு, விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவ... மேலும் பார்க்க

பெட்டிக்கடைகளில் இருந்து 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட, விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா உள்ளிட்ட 5 கிலோ போதைப் பொருள்களை, பெரம்பலூா் ஊரகக் காவல் துறையினா் பறிமுதல் செய்து 2 பேரை சிறையில் அடைத்தனா். ப... மேலும் பார்க்க

வண்டல், களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் வண்டல் மற்றும் களிமண் எடுக்க விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க