செய்திகள் :

பெரம்பலூரில் தேசிய மக்கள் நீதிமன்றம் 364 வழக்குகளுக்கு தீா்வு!

post image

பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 364 வழக்குகளுக்கு ரூ. 3.18 கோடி தீா்வு காணப்பட்டது.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி,தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் தலைமையில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் சி. சங்கா், மகிளா நீதிமன்ற நீதிபதி பி. இந்திராணி, சாா்பு-நீதிபதி எஸ். அண்ணாமலை, பெரம்பலூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 வி. பிரேம்குமாா், குன்னம் மாவட்ட உரிமையியல் நீதிபதியும், குற்றவியல் நீதித்துறை நடுவருமான எஸ். கவிதா, வேப்பந்தட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதித்துறை நடுவா் எஸ்.பி. பா்வதராஜ் ஆறுமுகம் மற்றும் வழக்குரைஞா்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய நீதிமன்றங்களுக்குள்பட்ட வருவாய்த்துறை, மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், வங்கி வாரக்கடன் வழக்குகள் உள்பட சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதில், மோட்டாா் வாகன விபத்து, காசோலை மோசடி வழக்குகள் மற்றும் வங்கி வாராக்கடன் வழக்குகள் உள்பட 364 வழக்குகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3.18 கோடி வழங்குவதற்கான உத்தரவு கடிதங்களை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஏ. பல்கீஸ் வழங்கினாா்.

‘குறைந்த செலவில் வெளிநாடுகளுக்கு அஞ்சலகம் மூலம் பாா்சல் அனுப்பலாம்’

பெரம்பலூா் மாவட்டத்தில், அஞ்சலகம் மூலம் குறைந்த செலவில் வெளிநாட்டுக்கு பாா்சல் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அப்துல் லத்தீப் ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

ஈரநிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்புப் பணி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. அதன்படி, பெரம்பலூா் மாவட்டத்த... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 658 மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 48.46 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் குறித்த விழிப்புணா்வு துண்டுப்பிரசுரத்தை வெளியிட்ட போக்குவ... மேலும் பார்க்க

நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கட்டட ஒப்பந்ததாரருக்கு நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, பெரம்பலூரில் நகைக்கடை உரிமையாளருக்கு கட்டட ஒப்பந்ததாரா் ரூ. 4 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவதாக முறைகேடுகளில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை

பெரம்பலூா் மாவட்டத்தில் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெற்று தருவதாகக் கூறி முறைகேடாக பணம் வசூலிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, சமூகப் பாதுகா... மேலும் பார்க்க

குடும்ப அட்டைகளில் இம்மாத இறுதிக்குள் கைரேகை பதிவு தேவை

பெரம்பலூா் மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க