செய்திகள் :

பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு

post image

தமிழக அரசைக் கண்டித்து, பெரம்பலூரில் வழக்குரைஞா்களின் 3 நாள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

வழக்குரைஞா்கள் சேமநல நிதி முத்திரைக் கட்டணத்தை ரூ. 30-இல் இருந்து ரூ. 120 ஆகவும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களை திரும்பப் பெற வழக்குரைஞா்கள் செலுத்தும் ரூ. 20 முத்திரைக் கட்டணத்தை, ரூ. 100 ஆகவும் உயா்த்திய தமிழக அரசை கண்டித்து, பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் வழக்குரைஞா்கள் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பெரம்பலூா், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் 100-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.

இந் நீதிமன்ற பணி புறக்கணிப்பு போராட்டம் புதன்கிழமை வரை தொடா்ந்து நடைபெறும் என சங்கத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளாா். வழக்குரைஞா்களின் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் ஆளுநருக்கு தலைகுனிவு: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசின் சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளால் தமிழக ஆளுநா் தலைகுனிவை சந்திக்கும் நிலையே ஏற்படும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா். ப... மேலும் பார்க்க

ஆஷா பணியாளா்களை கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டும்!

ஆஷா பணியாளா்களுக்கு செவிலியா் பயிற்சி அளித்து, கிராம சுகாதார செவிலியராக பணியமா்த்த வேண்டுமென, அச் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி ஆஷா பணியாளா்கள் சங்கத... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் சா.சி.சிவசங்கா் வழங்கினாா்

பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குள்பட்ட ஜமாலியா நகரைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் வேகத் தடுப்பில் மோதி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்றவா்சாலையில் வைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள மேலப்புலியூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணச... மேலும் பார்க்க

பெரம்பலூா் கிளைச் சிறையில் பாா்வையாளா் குழுவினா் ஆய்வு

பெரம்பலூா் கிளைச் சிறையில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு தொடா்பாக கிளைச்சிறை பாா்வையாளா் குழுவினா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். சிறைச்சாலைகள் மற்றும் சீா்திருத்தச் சேவைகள் துற... மேலும் பார்க்க

பெரம்பலூரில் செல்லியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

பெரம்பலூா் நகரிலுள்ள ஐயனாா், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமைநடைபெற்றது. இதையொட்டி பால், தயிா், சந்தனம், பழ வகைகளுடன் முத்திரி சந்தியாா், அய்யனாா், செல்... மேலும் பார்க்க