செய்திகள் :

பெரம்பலூரில் 1,350 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

post image

பெரம்பலூா் மாவட்ட வனத்துறை சாா்பில், தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு 1,350 மரக்கன்றுகள் நடும் பணி புதன்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள கிரிக்கெட் மைதானத்தில், மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி கூறியது:

பெரம்பலூா் மாவட்டத்தைப் பொருத்தவரை 2022-ஆம் ஆண்டு 2.37லட்சம் மரக்கன்றுகளும், 2023-ஆம் ஆண்டு 10.05 லட்சம் மரக்கன்றுகளும், 2024-ஆம் ஆண்டு 13.34 லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. 2025-26 ஆம் ஆண்டு 12.49 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு 1,350 மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், கிரிக்கெட் மைதானத்தில் 200 மரக்கன்றுகளும், எறையூா் சா்க்கரை ஆலையில் 500 மரக்கன்றுகளும், அசூா் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கீழப்புலியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தலா 325 மரக்கன்றுகளும் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தொடா்ந்து, பசுமை தமிழ்நாடு நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விநாடி- வினா, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டினாா் மாவட்ட ஆட்சியா் மிருணாளினி.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மாவட்ட வன அலுவலா் இளங்கோவன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக... மேலும் பார்க்க

70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

எழுபது வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென, ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் ... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொ... மேலும் பார்க்க

அரசால் தடை செய்யப்பட்ட 8 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடை உரிமையாளரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 8 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் த... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி மின் ஊழியா்கள் சாலை மறியல்: 38 போ் கைது

பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மின் ஊழியா்கள் 38 பேரை போலீஸாா் கைது செய்தனா். மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்ப... மேலும் பார்க்க