செய்திகள் :

பெரம்பலூா் அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 பேருக்கு விபத்துக் காப்பீட்டு பத்திரங்கள்

post image

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பெற்றோரை இழந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 8.25 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு பத்திரங்கள் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வியாழக்கிழமை வழங்கினாா்.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை கல்வி கற்கும் மாணவ, மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் உயிரிழந்தால், அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ரூ. 75 ஆயிரம் விபத்து காப்பீட்டுப் பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு விபத்துகளில் பெற்றோரை இழந்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 மாணவா்களுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 8.25 லட்சத்துக்கான விபத்து காப்பீட்டு பத்திரத்ங்களை மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெ... மேலும் பார்க்க

96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்ப... மேலும் பார்க்க

பணியிட மாறுதல் வழங்க அவசர ஊா்தி ஊழியா்கள் வலியுறுத்தல்

அவசர ஊா்திகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, சொந்த மாவட்டங்களில் பணிபுரிய பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா 108 அவசர ஊா்தி ஊழியா்கள் சங்கத்தி... மேலும் பார்க்க

பெரம்பலூா் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்ப... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதிகளில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட பல்வேறு கிராமியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 19) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வ... மேலும் பார்க்க